அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்! என்று, விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று தினத்தைக் கடைப்பிடிக்கிறது. இது குறித்து விஹெச்பி.,யினர் தெரிவித்த போது….
1947ம் வருடம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி அன்னிய ஆட்சியிலிருந்து நமது பாரத நாடு சுதந்திரம் பெற்றாலும், அந்தத் தருணத்தில் தேசப்பிரிவினை ஏற்பட்டு நமது பாரத நாட்டிலிருந்து ஒரு பகுதி பாகிஸ்தானாக உருவானது.
அப்போது பாகிஸ்தானில் வசித்து வந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் லக்ஷக்கணக்கில் விரட்டப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்; பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்; குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
தேசப்பிரிவினை என்பது உண்மையான தேச பக்தர்களின் நெஞ்சத்தில் இன்றும் ஒரு சோகமான நிகழ்வாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும் அகண்ட பாரதம் என்றேனும் ஒரு நாள் அமைந்தே தீரும்; அதற்கு வாழ்நாள் உள்ளவரையில் பாடு படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையின்பாற்பட்டு,விஸ்வ ஹிந்து பரிஷத் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி “அகண்ட பாரத திவஸ்” சபதம் ஏற்பு தினம்” அனுசரித்து வருகிறது.
“அகண்ட பாரதம் அமைப்போம்; இழந்த நிலப்பரப்பை மீட்போம்; இழந்த கோவில்களை மீட்டு மீண்டும் புனர் நிர்மாணம் செய்வோம்; இழந்த சகோதர சகோதரிகளை மீண்டும் தாய்மதம் திரும்பச் செய்வோம்… என்று கூறினர் விஹெச்பி.,யினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை