அரிவாளால் வெட்டி… முதியவரிடம் செல்போன் பறிப்பு!

Published:

cell phone
cell phone

மதுரை அருகே அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே விளாங்குடியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் 58. இவர், மதுரை அருகே சிக்கந்தர் சாவடியில் டீக் கடைக்கு வந்து விட்டு, டீக்கடையில் அவர் டீ குடித்துக் கொண்டு இருந்தாராம்.

அப்போது சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த
ராம்ஜி (வயது 23) இவரை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டாராம் .

இதுகுறித்து விவேகானந்தன் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ராம்ஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img