December 6, 2025, 12:09 AM
26 C
Chennai

நள்ளிரவில் அடித்து நொறுக்கப் பட்ட ஆட்டோக்கள்; இழப்பீடு கேட்டு மக்கள் சாலை மறியல்!

road-block-protest-madurai
road-block-protest-madurai

நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் ஐந்தாவது பிளாக்கில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் 5 மர்ம நபர்கள் அங்கே இருக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர் மேலும் ,அதை தடுக்க முயன்ற பொதுமக்களையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்க முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து ,அப்பகுதி மக்கள் திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக இரண்டு நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

இந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், ஐந்து நபர்கள் முகமூடி அணிந்து அங்கு உள்ள வாகனங்களை அடித்து நொறுக்குவது தெரிந்தது. இந்தக் காட்சிகள் வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடைந்த வாகனங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இந்த நேரத்தில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். திடீர்நகர் உதவி காவல்துறை ஆணையாளர் மற்றும் திடீர் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

நள்ளிரவில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாகனங்களை தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல், மதுரை மாநகரில் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு போன்ற நிகழ்வு எல்லிஸ் நகர் எஸ் எஸ் காலனி பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது .

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories