கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் குவியல்கள்; விவசாயிகள் கவலை!

madurai paddy aquiring centre - 2026

சோழவந்தான்: இடைத்தரகர்கள் மூலம் வெளிமாவட்ட வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில்  நெல் அறுவடைக்கு முன்பாகவே நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வியாபாரிகள் நெல்லை வாங்குவதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் பருவமழை காலத்திலும் மற்ற நேரங்களில் கிணற்றுப்பாசனம் மூலம் நெல் நடவு நடைபெற்று இன்னும் சில நாட்களில் நெல் அறுவடை செய்ய தயாராக இருக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே அரசியல்வாதிகள் துணையுடன் அதிகாரிகள் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து வியாபாரிகளின் நெல்லை வரவழைத்து கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் ,அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் , இப்பகுதியில் விளையும் அட்சயா நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். 

நெல் அறுவடைக்கு முன்பாக கொள்முதல் நிலையம் அமைப்பதால், வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து உள்ளூர் விவசாயிகள் போல் நெல்லைபோட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் நெல்  அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் ஒரு மூடை நெல் 1400 க்கு வாங்கி மதுரை மார்க்கெட்டில் 1800க்கு விற்று அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் சில அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையுடன் இந்த செயலை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் தீரவிசாரித்து, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories