கிழக்கே போகும் ரயில்-12ஆண்டு க்கு பின் மீண்டும் இன்று முதல்..

கிழக்கே போகும் ரயில் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படும் மதுரை – தேனி -மதுரை ரயில் போக்குவரத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் துவங்கியது.தேனியில் இருந்து மதுரைக்கு ரயில் இயக்கினால் போதாது.செங்கோட்டை சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க முதல்நாளே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு, மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928 ஆம் ஆண்டு போடி – மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954 ஆம் ஆண்டு குறுகிய பாதை – மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரை – போடி இடையே 98 கி.மீ. தூரத்திற்கு அகல பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் சுணக்கம் ஏற்பட்டது. மக்களின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டம் காரணமாக ரூ.506 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

தற்போது முதற்கட்டமாக மதுரை – தேனி இடையே 75 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தேனி – போடி இடையேயான பணிகள் நடைபெற்று வருகிறது
12 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் நிறைவுற்று நேற்று பிரதமர் மோடி மீண்டும் ரயில் போக்குவரத்தை காணொளி காட்சி மூலம் நேற்று மாலை துவக்கி வைத்தார். அதன்படி, மதுரை – தேனி இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் சேவைஇன்று முதல் துவங்கியுள்ளது.

மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கும், தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கும் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய மதுரையில் இருந்து தேனிக்கு 45 ரூபாயும், பிற நிலையங்களுக்கு 30 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை – தேனி அகல ரயில் பாதையில் 12 ஆண்டுகளுக்கு பின் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் தங்களின் முதல் பயணத்தை இன்று உற்சாகமாக துவக்கினர்.

மதுரை – தேனி செல்கையில் மேற்கேயும், தேனி – மதுரை வருகையில் கிழக்கேயும் பயணிக்கும். இந்த ரயிலை வைத்து தான் கிழக்கே போகும் ரயில் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார் இயக்குனர் பாரதிராஜா.அப்போது முதல் பலரும் இந்த ரயிலை கிழக்கே போகும் ரயில் என்றே செல்லபெயரிட்டு அழைக்கின்றனர்

மதுரை வரை இயங்கும் இந்த ரயில் சேவையை சென்னை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், தினமும் இரண்டு முறை மட்டும் இயக்கப்படும் ரயிலை 4 முறை இயக்க வேண்டும், விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று நிலையங்கள் தவிர்த்து கூடுதலாக நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, கருமாத்தூர் ரயில் நிலையங்களிலும் ரயில் நிறுத்த வேண்டும் போடி அகலரயில் பாதை பணிகள் முடிந்ததும் தோட்ட தொழிலாளர்கள் நலன் கருதி போடியில் இருந்து செங்கோட்டை சென்னை க்கு ரயில் இயக்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளும் ரயில் பயணிகளிடம் இருந்து எழுந்துள்ளன.

IMG 20220527 142131 - 2026
1653634735123 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories