அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் ..

அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தெரிவித்தார். கோவில் சிலைகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் மதுரையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் நரசிங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கங்காளநாதர், அதிகார நந்தி ஆகிய உலோக சிலைகள் 1985-ம் ஆண்டு கடத்தப்பட்டன. இந்த, சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று 1986-ம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 2 சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அந்த சிலையை யார் கடத்தியது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நியூயார்க் அருங்காட்சியகத்திற்கு விற்பனை செய்தவர் குறித்தும் விசாரித்து வருகிறோம்.

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. தமிழகத்தை சேர்ந்த உலோக சிலைகள் அதிக அளவில் லண்டனுக்கும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் கடத்தப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40 சிலைகள் எங்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. அந்த சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மரகதலிங்கம் வழக்கு மதுரை குன்னத்தூர் சத்திரத்தில் மாயமான மரகதலிங்கம் வழக்கு இறுதி கட்டத்தில் உள்ளது. அந்த லிங்கம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மீட்கப்பட்ட 10 சிலைகளில் 9 சிலைகள் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட சிலைகளை, கோவில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தனர்.

735645 slaal - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories