விநாயகர் சதுர்த்தி ராஜபாளையத்தில் போலீசார் அணிவகுப்பு..

Published:

IMG 20220830 WA0069 - 2026

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று ராஜபாளையத்தில் வஜ்ரா வாகனத்துடன் 100 போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட உள்ளது .

நான்கு நாட்கள் கழித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் அணிவகுப்பு இராஜபாளையம் பொறுப்பு காவல் துறை கண்காணிப்பாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர் ) சபரிநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் உட்பட 100 போலீசார் கலந்து கொண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரவுண்டானா வழியாக நகர் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது பேரணியில் வஜ்ரா வாகன உட்பட போலீஸ் சார் வாகனங்களும் அணிவகுத்து சென்றது எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுவதற்காக போலீசார் இந்த அறிவிப்பு நடத்தினர்

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img