December 6, 2025, 2:12 PM
29 C
Chennai

திண்டுக்கலில் 12 வயது சிறுமி கர்ப்பம் தந்தை உள்பட 3 பேர் கைது

திண்டுக்கலில் 12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொடுமையான சம்பவத்தில் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 2022 09 15T122921.457 - 2025

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பிறகு தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

மனைவி இறந்துவிட்டதால் மகளை தனது இச்சைக்கு பயன்படுத்தி அவருடன் உறவு வைத்துள்ளார். பின்னர் தான் வேலைக்கு செல்லும்போது அதேபகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச்செல்வது வழக்கம். கண்ணனுக்கு திருமணமாகி அவரது மனைவி இறந்துவிட்டார். அவரது மகளும் மூளைவளர்ச்சி குறைபாடால் இறந்துவிட்டார். இதுபோன்ற நிலையில் தனது வீட்டுக்கு அடைக்கலமாக வந்த சிறுமிக்கு கண்ணனும் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். கண்ணன் தனக்கு நெருக்கமான நண்பர். மேலும் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

எனவே இதுகுறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என மகளை மிரட்டியுள்ளார். இதனால் அவர் இந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த சமயத்தில் சிறுமியுடன் நெருக்கமாக கண்ணன் இருந்ததை அதேபகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமதுரபீக் (57) என்பவர் பார்த்துள்ளார். தானும் சிறுமியுடன் நெருக்கமாக இருக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து வெளியில் சொல்லிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முகமதுரபீக்கும் சிறுமியை பலவந்தப்படுத்தி உறவு வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியானார். அந்த விபரம் அவருக்கு தெரியவில்லை. இதைக்கூட அறிந்திராத தந்தையும், அவரது நண்பர்களும் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது 12 வயது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது தந்தை உள்பட 3 பேர் தன்னை கற்பழித்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் வழக்குபதிவு செய்து சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்க சமூகநலத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories