திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குழுக் கூட்டம்!

Published:

vivekananda college prog madurai - 2026

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கு பெற்றனர். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில், எம். எஸ். செல்லமுத்து அறக்கட்டளையின் இயக்குனர் ஜனார்த்தனன் பாபு மாணவர்களிடையே கேலி வதையின் விளைவுகளையும் மற்றும் போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

எஸ் செல்லமுத்து அறக்கட்டளையின் திரிசூல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம், போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய தீமைகளை பற்றி விளக்கி கூறினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர், மூத்த பேராசிரியர் முனைவர் காளியப்பன், சோழவந்தான் காவல் ஆய்வாளர் பால்ராஜ், குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், முதுநிலை மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எல்லைராஜா, மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் ரகு, முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் தர்மானந்தம், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்,  கணிதத் துறை பேராசிரியர் முனைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போதை பொருள் ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லப்பாண்டியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வை, இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காமாட்சி தொகுத்து வழங்கினார்

Related articles

Recent articles

spot_img