பொங்கலுக்காக… கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

manjal aruvadai turmeric for pongal - 2026

தை திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்

தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர் எர்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துமஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இது குறித்து, கொத்து மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள் கூறுகையில்:
தைத்திருநாளை முன்னிட்டு , வருடம் தோறும் கொத்து மஞ்சள் நடவு செய்து மார்கழி 25ஆம் தேதிக்கு பிறகு அறுவடை நடைபெறும் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது ஆடி மாசம் பயிரிடுவோம் ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் பயிரிடுவதற்கு 45 ஆயிரம் செலவு செய்கிறோம் அறுவடை செய்த கொத்து மஞ்சள் ஏக்கர் ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை விலை போகும் ஆகையால் , இதில் நல்ல லாபம் உள்ளது .

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பாம்பே உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம் மழை நேரங்களில் நோய் திரும்பத் தாக்கினால் மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது அப்போது எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொத்து மஞ்சள் மகசூல் குறைவாகவே உள்ளது

பொங்கல் தொகுப்பில் கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கரும்புடன் சேர்த்து கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஒரு நேரம் மகசூல் அதிகம் கிடைக்கும் ஒரு நேரம் விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் நஷ்டம் ஏற்படும் பொங்கள் தொகுப்பில் கொத்துமஞ்சள் கொடுத்திருந்தால் நஷ்டத்தை சரி கட்டி இருப்போம்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீட்டில் பொங்கல் வைக்கும் அனைவரும் கொத்து மஞ்சள் இல்லாமல் பொங்கல் வைக்க மாட்டார்கள் ஆகையால், பொங்கலுக்கு கொத்துமஞ்சள் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது இவ்வாறு  கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Entertainment News

Popular Categories