நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

public protest in vatrayiruppu for nallathangal temple idol issue - 2026

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயில் உள்ளது.

தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை பாசத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய 15 ம் நூற்றாண்டை சேர்ந்த சிறப்பு வாய்ந்த அக்கோயிலில் நல்லதங்காள் அம்மன் உருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில் அம்மன் உருவில் எழுந்தருளிய நல்லதங்காள் சிலையை கடந்த 18 தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தியதுடன் உண்டியல் பணத்தையும் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதையடுத்து அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் கோயில் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். குற்றவாளியை சில தினங்களில் கைது செய்து விடுவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். பல்வேறு நபர்களிடமும் விசாரணை செய்தனர். ஆனால் குற்றவாளி யாரும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

இதனால் கோபமுற்ற கிராம மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் ஊரின் பிரதான சாலையில் திரண்டு பி எம் டி மக்கள் பாதுகாப்பு படை தலைவர் இசக்கி ராஜா என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும், குற்றவாளிகளை 19ஆம் தேதிக்குள் கண்டுபிடிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Entertainment News

Popular Categories