December 5, 2025, 12:59 AM
24.5 C
Chennai

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

pandalam aiyappa swami temple - 2025

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று மாசி உத்திரம் நட்சத்திரத்தை ஒட்டி, பந்தளம் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப ஜயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் ஐயப்பனுக்கு இன்று அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் இன்று இரவு வரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர்.

கேரளத்தில், பிரசித்தி பெற்ற சுவாமியாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்பன் பொதுவாக பங்குனி மாதம் உத்திர நாளில் அவதரித்ததாகக் கருதப்பட்டு, அன்று ஐயப்பனுக்கு ஜன்ம தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

சபரிமலை, ஆரியங்காவு உள்ளிட்ட முக்கிய கோவில்களில் மட்டும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடத்தி ஜன்ம தின வழிபாடு கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும், சபரிமலையில் ஐயப்பனுக்கு ஐயப்பன் அவதார நன்னாளான பங்குனி உத்திரத்தில் பம்பை நதியில் ஆராட்டு விழா விமர்சையாக நடைபெறுவது முக்கியமானது.

இந்த நிலையில் பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள சுவாமி ஐயப்பன் அவதாரத் திருநாள் விழா – மாசி உத்திரம் விழா கோலாகலமாக இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு பந்தளம் ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்களும் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம் முடிந்து, ஐயப்பன் கிருவாபரணங்கள் பந்தளம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. பந்தளம் ஐயப்பனுக்கு சபரிமலை ஐயப்பனின் தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த தரிசனத்தைக் கண்டு களித்தனர்.

பகலில் கலபாபிஷேக வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பகல் மூடாமல் இரவு 9 மணி வரை சபரிமலை ஐயனின் திருவாபரணங்கள் அணிந்த பந்தளம் ஐயப்பனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் பந்தளத்தில் இருந்தது. இரவு பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories