கோயிலைச் சுற்றியுள்ள சாலையை சீரமைத்த மக்கள்; டிராக்டர் பறிமுதல்! சாலை மறியல்!

usilampatti road roko - 2026

மதுரை, உசிலம்பட்டி அருகே பெருமாள் கோவில் செல்லும் பாதையை சரி செய்வதற்கு மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர்சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பழமையான பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் , 16 ஆண்டுகளுக்குப் பின் பால் அபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் அதனை சரி செய்வதற்கு கிராம மக்கள் டிராக்டர் மூலம் அருகில் உள்ள ஓடைகளில் மண்ணை அள்ளி சரி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருவாய் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கோவில் திருப்பணிக்கு மண் அள்ளிய டிராக்டர் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் எழுமலை- உசிலம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் எருமார்பட்டி என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த எழுமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்ற கோவில் திருப்பணிக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து வாகனம் பறிமுதல் செய்யப்படாது என கூறியதைத் தொடர்ந்து ,
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories