February 19, 2026, 8:05 AM
24.4 C
Chennai

தை அமாவாசை: சரவணப் பொய்கையில் பிதுர் தர்ப்பணம் அளித்து முன்னோர் வழிபாடு!

thai amavasai tharpanam in saravana poygai - 2026

மதுரை: தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத மகாளய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு இறந்த தங்கள் குடும்ப முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

இதன் மூலம் இறந்த தங்களின் முன்னோரின் ஆத்மா சாத்தியடைந்து அவர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரவண பொய்கையில் ஏராளமானோர் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், வைகை காலனி, அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம் , வரசித்தி விநாயகர் கோயில்களில் தை அம்மா வாசயை ஒட்டி, தர்பணம் செய்து வைக்கப்பட்டது.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக அவர்களை வேண்டி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவில் அருகில் உள்ள வைகை ஆற்றில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர்.
தொடர்ந்து, வைகை ஆற்றில் நீராடி சூரியனை வணங்கினர் பின்னர் திருவேடகத்தில் உள்ள திரு ஏடகநாதர் ஏலவார்குழலி திருக்கோவிலில் விளக்கேற்றி முன்னோர்களை வணங்கினர் .

இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் அருகில் உள்ள தேனி திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் தர்ப்பணம் கொடுக்கும் வருகை தரும் பொது மக்களுக்காக கோவில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

காவல் துறையினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வணங்கி செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Topics

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

சரி… இன்று போய் நாளை வா!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

Entertainment News

Popular Categories