December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

களைகட்டும் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ..

1734965 sorimuthuayyanr - 2025
787845 untitled 2 - 2025

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது களைகட்ட துவங்கி உள்ளது.

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அனுமதி மறுப்பு இந்த ஆண்டும் கால்நாட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கி உள்ளது.

வழக்கமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதிக அளவில் அங்கு சென்று தங்கி இருந்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு அங்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே தனியார் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் குறைந்தது 3 நாட்களாவது தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியாவிடம் பேசியதன் பேரில் இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

இதனால் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆர்வமுடன் குடில் அமைத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் செரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 28 -ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது. இதில் தென்காசி, ஆலங்குளம், நெல்லை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் குடில் அமைத்து வருகி்ன்றனர். இவர்கள் வரும் 30- ந் தேதி வரை இக்கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அகஸ்தியர்பட்டியில் இருந்து கோவிலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories