February 15, 2025, 4:09 PM
31.6 C
Chennai

நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை

நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த மே மாதம் 14-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் பாறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 54 கல்குவாரிகளும் மூடப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி 6 அதிகாரிகள் தலைமையில் தலா ஒரு குழுக்கள் அமைத்து கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி முதல் அனைத்து குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

சுமார் 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக்கு பின் அறிக்கைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்ததில் 14 குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குவாரிகளை ஏன் மூடக்கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சுமார் 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அபராத தொகை ரூ.300 கோடியை தாண்டியது. இதையடுத்து குவாரி உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அபராதத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும் எந்த விதமான கல்குவாரிகளும் செயல்படாததினால் கற்கள், ஜல்லிகள் மற்றும் எம் சாண்ட் மணலுக்கும் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான தொழில்கள் முழுவதும் முடங்கிப் போய் இருப்பதாகவும் அவர்கள் அதில் கூறியிருந்தனர். இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கல்குவாரிகளில் குழுக்கள் ஆய்வு செய்ததில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் மீண்டும் முறையாக தகவல் தெரிவித்து கல்குவாரிகளை ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என்று தெரிவித்தது.

மேலும் அபராதம் விதிக்கப்பட்ட 40 குவாரிகளை இடைக்காலமாக செயல்பட அனுமதிக்கலாம் எனவும், மீதமுள்ள 14 குவாரிகளில் விதிமீறல் உறுதியாகி உள்ளதால் அந்த குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதித்தும் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள 40 கல்குவாரிகள் செயல்பட தொடங்கின. அதற்கான அனுமதி சீட்டுகளும் நெல்லை மாவட்ட கனிமவள துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories