தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கல்!

Published:

certification prog in sengottai - 2026

செங்கோட்டையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசு அமைச்சக திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் முத்து தையல் பயிற்சி மையத்தில், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 மாத இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிா்வாகி தங்கம் தலைமை தாங்கினார். நூலகர் ராமசாமி, விநாயகா இன்ஸ்ட்டியூட் நிர்வாகி உஷாராணி, ஸ்டார் இன்ஸ்டிட்யூட் முதல்வர் வளர்மதி, ராயல் பப்ளிக் ஸ்கூல் முதல்வர் தாஹிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளா் ஓவியா அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதனை தொடர்ந்து ஆரி எம்பிராய்டரி பயிற்சி முடித்தவர்களுக்கு தென்காசி உதவி காவல் ஆய்வாளர் ரத்னபால் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் வசந்தி, கந்தமயில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Related articles

Recent articles

spot_img