மீண்டும் தொடங்கிய நெல்லை – தூத்துக்குடி பாசஞ்சர் சேவை போல் இதுவும் தொடங்கப்படுமா?

palaruvi express - 2026
#image_title

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால், நிறுத்தப் பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி -திருநெல்வேலி – பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு இயக்கப்படும் என்று தெற்கு ர‌யில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னர் நிறுத்தப் பட்ட செங்கோட்டை கொல்லம் செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா தமிழ்நாடு ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை தினசரி இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்த‌து. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச்செல்லும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில், திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இயக்கப்படும் என்று தெற்கு ர‌யில்வே அறிவித்துள்ளது. ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் சார்பில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயிலை நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பி.,க்கள் குழு மற்றும் தமிழக கேரளா ரயில் பயணிகள் சங்கத்தினர் வர்த்தகர்கள் பல்வேறு நிலைகளில் வலியுறுத்தி வந்தும் இந்த வண்டி நிறுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த ரயில் மீண்டும் இயக்குவதற்கான எந்த நடவடிக்கையும் மதுரை கோட்ட ரயில்வே தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

விரைவில் கொல்லம்- செங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் ஏற்கெனவே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கி வந்த கொல்லம் – திருநெல்வேலி – கொல்லம் இரு ரயில்களையும் மீண்டும் இயக்கவும், கொல்லம் – செங்கோட்டை – விருதுநகர் – கோவை இடையே இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கவும், செங்கோட்டை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய ரயிலை கொல்லம் – ராமேஸ்வரம் இடையே மீண்டும் இயக்கவும் கேரளா எம்பி பிரேமச்சந்திரன் தென்னக ரயில்வேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

தமிழக எம்பி.,க்களும் ஒன்றாக இணைந்து இந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்.

நூறாண்டுகளுக்கு முன்பு செங்கோட்டை – புனலூர் இடையே மலைவழிப்பாதையில் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு முதன்முதலாக திருவனந்தபுரம் – சென்னை ரயிலும், கொல்லம் – செங்கோட்டை ரயிலும் அப்போதைய திருவாங்கூர் மன்னரால் துவக்கி வைக்கப்பட்டது.

தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், சில காலமாக இந்த ரயில் கொல்லம் – செங்கோட்டை – கொல்லம் வரை இயங்கி வந்தது. ஆனால் போதிய வருவாய் இல்லை என காரணம் காட்டி கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில், மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில், புனலூர்- குருவாயூர் பயணிகள் ரயில் மூன்றையும் இணைத்து மதுரை – குருவாயூர் என ஒரே எக்ஸ்பிரஸ் ரயிலாக தென்னக ரயில்வே இயக்கி வருகிறது. இது பயணிகளுக்கு உதவிகரமாக இருந்தாலும், பாரம்பரியமாக இயங்கி வந்த செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை ரயில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, தென்காசி, விருதுநகர், கொல்லம் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories