மீண்டும் தொடங்கிய நெல்லை – தூத்துக்குடி பாசஞ்சர் சேவை போல் இதுவும் தொடங்கப்படுமா?

palaruvi express - 2026
#image_title

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால், நிறுத்தப் பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி -திருநெல்வேலி – பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு இயக்கப்படும் என்று தெற்கு ர‌யில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னர் நிறுத்தப் பட்ட செங்கோட்டை கொல்லம் செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா தமிழ்நாடு ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை தினசரி இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்த‌து. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச்செல்லும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இயக்கப்படும் என்று தெற்கு ர‌யில்வே அறிவித்துள்ளது. ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் சார்பில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயிலை நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பி.,க்கள் குழு மற்றும் தமிழக கேரளா ரயில் பயணிகள் சங்கத்தினர் வர்த்தகர்கள் பல்வேறு நிலைகளில் வலியுறுத்தி வந்தும் இந்த வண்டி நிறுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த ரயில் மீண்டும் இயக்குவதற்கான எந்த நடவடிக்கையும் மதுரை கோட்ட ரயில்வே தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

விரைவில் கொல்லம்- செங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் ஏற்கெனவே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கி வந்த கொல்லம் – திருநெல்வேலி – கொல்லம் இரு ரயில்களையும் மீண்டும் இயக்கவும், கொல்லம் – செங்கோட்டை – விருதுநகர் – கோவை இடையே இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கவும், செங்கோட்டை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய ரயிலை கொல்லம் – ராமேஸ்வரம் இடையே மீண்டும் இயக்கவும் கேரளா எம்பி பிரேமச்சந்திரன் தென்னக ரயில்வேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக எம்பி.,க்களும் ஒன்றாக இணைந்து இந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்.

நூறாண்டுகளுக்கு முன்பு செங்கோட்டை – புனலூர் இடையே மலைவழிப்பாதையில் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு முதன்முதலாக திருவனந்தபுரம் – சென்னை ரயிலும், கொல்லம் – செங்கோட்டை ரயிலும் அப்போதைய திருவாங்கூர் மன்னரால் துவக்கி வைக்கப்பட்டது.

தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், சில காலமாக இந்த ரயில் கொல்லம் – செங்கோட்டை – கொல்லம் வரை இயங்கி வந்தது. ஆனால் போதிய வருவாய் இல்லை என காரணம் காட்டி கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில், மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில், புனலூர்- குருவாயூர் பயணிகள் ரயில் மூன்றையும் இணைத்து மதுரை – குருவாயூர் என ஒரே எக்ஸ்பிரஸ் ரயிலாக தென்னக ரயில்வே இயக்கி வருகிறது. இது பயணிகளுக்கு உதவிகரமாக இருந்தாலும், பாரம்பரியமாக இயங்கி வந்த செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை ரயில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, தென்காசி, விருதுநகர், கொல்லம் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories