ஆவணி அவிட்டம்; செங்கோட்டையில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றல்!

Published:

avani avittam in sengottai - 2026

செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்றங் கரையில் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ஐயப்பன் முன்னிலையில் நடந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.

இந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img