February 19, 2026, 12:14 AM
26 C
Chennai

தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!

railway news - 2026
#image_title

ஜன.26 குடியரசுதினத்தை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையில் சிறப்பு ரயில் நாளை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,

[1] தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயிலின் எண் – 06137.
இந்த ரயில் நாளை 24/01/26 சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் 25/01/26 ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

[2] செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு
ரயிலின் எண் – 06138.
இந்த ரயில் 26/01/26 திங்கள்கிழமை பகல் 03.00 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் 27/01/26 செவ்வாய்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயிலில் 23 ICF பெட்டிகள் இணைக்கப்படும்.
1) முதல் வகுப்பு ஏசி பெட்டியும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியும் ஒன்றிணைந்த பெட்டி— 1.
2) இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி -1.
3)மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-3.
4) ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஸ்லீப்பர் பெட்டி – 12.
5)முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் – 4.
6) லக்கேஜ் மற்றும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்-2.

முன்பதிவு தற்போது ரயில்வே இணைய தளத்தில் தொடங்கி இருக்கிறது. மேலும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் நாளை 24/01/26 சனிக்கிழமை காலை முன்பதிவு துவங்கும்.

இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் – செங்கோட்டை இடையே செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக இயக்கப்படும்.

இந்ந்லையில், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் , தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் அனந்தன் அய்யாசாமி, முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை- தாம்பரம் இடையே குடியரசு தின விழா சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்ததற்காக தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Topics

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

சரி… இன்று போய் நாளை வா!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

Entertainment News

Popular Categories