மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம்

Published:

மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம்
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது.
 முகாமிற்கு திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை வகித்து முன்னோடி மனுநீதி நாள் முகாமிற்காக  மனுக்களுக்கு உரிய பதில் அளித்தார்.
  முகாமில் 10 முதியோருக்கு ஓய்வூதிய ஆணையும், 2 பேருக்கு உழவர் அடையாள அட்டையும் வழங்கினார் . முன்னதாக முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க உரையாற்றினர்.
  முகாமில் கீழப்பாவூர் ஒன்றியக்குழுத் தலைவர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேசன், தனித்துணை ஆட்சியர் ஷேக் முகம்மது, துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், இருதயராஜ், அனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி முத்தையா, வேளாண்மை உதவி இயக்குனர் நல்லமுத்துராசா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா உட்பட துறை சார்ந்த அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முகாமில் அதிகாரிகள் தங்களின் துறையின் நலத்திட்டங்களை பற்றி விரிவாக தெளிவாக எடுத்துக்கூறினார்கள் நல்ல விசயம் பாராட்டுக்கள்  முகாமில் கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் துறைசார்ந்த அதிகாரிகள் 50 சதவீதம்  முதியோர் உதவித்தொகை பெற வந்தவர்கள் மீதி 20 சதவீதம் பல்வேறு குறைகளுக்காக மனுக்கள் கொடுக்க வந்தவர்கள் இவர்களின் பேச்சுக்கு பலன் இன்றி போனது காரணம் முதியவர்கள் தனக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்று பார்க்க வந்தவர்கள் இவர்களுக்கு அதிகாரிகளின் பேச்சு எப்படி புரியும் மேலும் அதிகாரிகள் தான் சொல்ல நினைக்கும் திட்டங்களின் பயன்களை மட்டும் சொன்னாலே போதுமானது அதை விட்டு பலன் பெற்றவர்கள் என நீண்ட பட்டியலை வசிப்பதை தவிர்க்கலாம்  வருங்காலங்களில் அதிகாரிகள்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img