உள்ளூர் செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமியிடம் சந்தானம் குழு விசாரணை

நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இவர்கள் இருவரிடமும் விசாரணை முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப் படும் என்று கூறப் படுகிறது.

நிர்மலா தேவி விவகாரத்தில் வெளியான அசிங்க வீடியோ: அதிர்ச்சியில் போலீஸார்

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

பி.இ. படிப்புக்கு ஆன்லைன் மட்டுமே விண்ணப்பம்: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.

சூட்டைத் தணிக்க அடுத்த 24 மணி நேரத்தில் மழை: எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அது தெரிவித்துள்ளது.

எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க நீதிபதி ராமதிலகம் காவல்துறைக்கு அறிவுரை!

இதையடுத்து, நீதிபதி எஸ்.வி.சேகரைக் கைது செய்து விசாரிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும்,  எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
- 2026

காவிரி விவகாரத்தில் வஞ்சனை இல்லை; வாஞ்சையுடன் நடக்கிறோம்: தமிழிசை

அதனால்தான், நான்கு மாநிலங்களையும் சேர்த்து வைத்து, கூட்டம் நடத்தி, ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டு, ஒரு நிரந்தர முடிவும் தீர்வும் எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை தெரிவித்துள்ள தமிழிசை, பின்னர் ஏன் உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறினார் என்பது அவருக்கே புரிந்த உண்மை.

மக்களைப் பாதுகாக்கும் மீனாட்சி: நிர்மலா சீதாராமனுடன் புகைப்படம் பகிர்ந்து தமிழிசை டிவிட்!

இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், காலை மதுரை மீனாட்சி கோயில் தரிசனம் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் மக்களைப் பாதுகாக்கும் அன்னை மீனாட்சியின் அருள்தரிசனம் - என்று குறிப்பிட்டிருந்தார்.

மதுரை கோயில் தீவிபத்து பகுதியை சீரமைக்க மத்திய அரசு உதவும்: நிர்மலா சீதாராமன்

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.

நான் தயார்; ஸ்டாலின் தயாரா?: தமிழிசை கிளப்பினார் ‘பட்டியல்’ அரசியல்!

மதுரை: தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார். திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் விடுத்துள்ளார்.

இப்படி பணத்த வெச்சிட்டு போனா..? எனக்கே எடுக்கணும்னு ஆசை வருது: சொல்பவர் போலீஸ்காரர்

இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்தால், எனக்கும் திருட ஆசையாகத்தான் இருக்கிறது என்கிறார். இப்படிப் பட்ட ஓர் எண்ணம் போலீஸாருக்கு தோன்றுவதே, உளவியல் ரீதியாக போலீஸாரை நேர்மையான வழியில் செல்ல தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது!

மதுரை வங்கிக் கிளையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இந்த ஆய்வின் போது, வங்கி வாடிக்கையாளராக வந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்த படி அனைத்தையும் கவனிக்கிறார். இருக்கும் ஓரிருவரும் நகர்ந்த பின்னர், தனி ஆளாக அமர்ந்திருக்கும் அவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காசாளர் இருக்கும் கேபினில் எட்டி பணத்தை எடுக்கிறார். இரு முறை முயன்று இரு முறையாக பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
- 2026

Recent articles