8 வழிச் சாலை அமைந்தால் 8 பேரைக் கொன்று சிறை செல்வேன்: ’சமூக விரோத’ மன்சூர் அலிகான்!

mansur ali - 2026

சேலம்: சேலம் வழியே எட்டு வழிச் சாலை அமைந்தால் எட்டு பேரை வெட்டுவேன் என்று வன்முறையைத் தூண்டிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ‘சினிமா ரவுடி’ மன்சூர் அலிகான்.

சேலத்தில் விமான நிலையம் விரிவாக்கப்படவுள்ளது. இங்கே எட்டு வழிச் சாலை ஒன்று அதிவிரைவு சாலையாக அமைக்கப்பட வுள்ளது. நாட்டில் எந்த திட்டங்கள் வந்தாலும், திட்டங்களுக்கான அறிவிப்புகள் வந்தாலும், அவற்றை எதிர்ப்பதற்கென ஒரு கூட்டம் சில பின்னணி வேலைகளைச் செய்யும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

அத்தகைய சக்திகள், இப்போது பிரபலமானவர்கள், திரையுலகத்தினர், தனித்தமிழ் இயக்கத்தினர், அரசுக்கு எதிரான கொள்கைகளைப் பேசி வருபவர்கள் ஆகியோரை வரிசையாக அழைத்து, சேலத்தில் நீர்நிலைகளைப் பார்வையிடுவது, சுற்றுச் சூழலைப் பார்வையிடுவது என்று அழைத்துச் சென்று காண்பித்துவிட்டு, ஊடகங்களை அழைத்து இத்தகைய நபர்களை பேட்டி அளிக்க வைத்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதாக ஊடகங்களில் சொல்லும்.

அத்தகைய ஒரு நிகழ்வுக்காக, நடிகர் மன்சூர் அலிகான், சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதாகக் கூறி, நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு ஒரு குழுவால் அழைத்து வரப் பட்டார். பின்னர் அவர் அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு, ஊடகங்களுக்கு வழக்கம் போல் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியவை… நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.

எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல் படுத்தக் கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரைக் கொன்று விட்டு சிறைக்கு செல்வேன்… – என்று கூறினார்.

தொடர்ந்து ஓமலூர் அருகே உள்ள சட்டூர், தும்பிபாடி, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார் மன்சூர் அலிகான்.

இவ்வாறு பேசிய மன்சூர் அலிகானுடன், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் உடனிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories