திமுக., எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும்: தமிழிசை!
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்னையை தீர்க்க மத்தியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 பேர் கைது!
மெரினாவில் 30க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்திய புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!
பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர்.
ரயில்சேவை எட்டிப்பார்க்காத தமிழக அரசியல்வாதிகள்
தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு, செங்கோட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய அகல
ரயில் பாதையில் தொடர் வண்டி சேவை தொடக்கம். இரு மாநில மக்களும் சிறப்பான வரவேற்பு
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
5 நாட்கள் விடுமுறையால் மக்களுக்குப் பணபரிவர்த்தனைகளில் சிக்கல் நீடிக்கக்கூடாது என்பதற்காக இன்று இரவு வரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’
இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி பிரச்னைக்காக… அதிமுக., உண்ணாவிரத தேதி ஏப்.3க்கு மாற்றம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக தரப்பிலான உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது
காவிரி நாடகத்தில் கரை சேர்ந்த கதாபாத்திரங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் பல பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக., எம்பி., நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக, தாங்கள் தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்றார்.
நாளையுடன் காலாவதியாகிறது ஸ்டெர்லைட்க்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி
ஸ்டெர்லைட்டுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
காவிரி: உழவர் அமைப்பு சார்பில் ஏப்.11ல் முழு அடைப்புப் போராட்டம்!
தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் ஆற்று நீர் உரிமைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய வாழ்வாதாரப் போராட்டம் ஆகும். இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை
’அந்த’ மருந்துக் கடையை மூடி எதிர்ப்பு தெரிவிச்சா… சரியா இருக்கும்!
இதனிடையே, ’அந்த மருந்துக் கடை’களை அதாவது, டாஸ்மாக் விற்பனையகங்களை ஒரு நாள் மூடி, அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தண்ணிக்காக, அந்த தண்ணி கடையை மூடுங்க என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.