உள்ளூர் செய்திகள்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு: ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு நிறைவேற்றப் படவில்லை என்றால் தீர்ப்பை கொடுத்தவர்களிடம் செல்வதுதான் சட்ட வழிமுறை என்றார் ஜெயக்குமார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்.2ல் ஓபிஎஸ் உண்ணாவிரதம்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால் அது கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மட்டத்திலும் அழுத்தம் கொடுக்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

ஷிப்டு போட்டு சாமி கும்பிட அனுப்பி வைங்கப்பா… நெல்லை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு!

அண்மைக் காலமாக காவல் துறையில் கீழ் நிலைக் காவலர்கள் சிலர், ஏன் அதிகாரிகளில் ஓரிருவர் கூட பணி நேரத்தில், பணியிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதற்கு, பணிச் சுமையும், மன அழுத்தமும் உயரதிகாரிகளின் நெருக்கடியும் காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது

தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு இல்லை: தண்டோரா போடும் தமிழிசை

தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு சிறிதளவும் இல்லை என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

விருகம்பாக்கம் ஐஓபி., வங்கி கொள்ளையன் நேபாளத்தில் சிக்கினான்!

இந்நிலையில் நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் என்பவனை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த சபிலாலை, சர்வதேச போலீசார் இண்டர்போல் உதவியுடன் கைது செய்தனர். 

திருவாமாத்தூரில் தேர்த் திருவிழா கோலாகலம்!

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரின் நான்கு சக்கரங்களுக்கும் பூஜைகள் செய்விக்கப்பட்டு தேரினை பராமரிக்கும் நபர்களுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு சுமார் 8 மணியளவில் தேர் பொதுமக்கள் அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு இழுக்கப்பட்டது.
- 2026

ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!

ரத்த வெள்ளத்தில் மிதந்த வீரபாகு உடனடியாக  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் ரஜினி மக்கள் மன்ற முதல் விழா: ‘சொந்த காசில்’ உதவிகள் வழங்கிய நிர்வாகி!

இது குறித்துக் கூறியபோது, "எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன். அது ரஜினியிடம் கற்றதுதான்" என்றார். 

தொழிலாளியின் வீட்டில் குவியல் குவியலாய்… முட்டைகளில் நெளிந்து வெளிவந்த பாம்புகள்: அச்சத்தில் அலறிய மக்கள்!

பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.

வாரியம் வருமென்றால் ராஜினாமா செய்வேன் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டேன்; எழுதிக் கொடுப்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை இப்படி ஏமாற்ற வேண்டும்?

பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் மோடி: அதிகாரிகள் ஆலோசனை!

இதற்கிடையே, ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சேர்த்து வைக்கலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடியிடம் அனுமதி கோரப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டுறவு தேர்தலில் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபடுவதாக மார்க். கம்யூ. புகார்

மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. - என்று கே. பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 
- 2026

Recent articles