காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு: ஜெயக்குமார்

jayakumar - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தாங்கள் தெரிவித்த தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருப்பதை உறுதி செய்து, மீண்டும் மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருப்பதாக தமிழகத்தில் ஊடகங்களில் பரவலாகக் குறிப்பிடப் பட்டன. மேலும், தமிழகத்தின் தரப்பில் பல்வேறு மட்டத்திலும் இதுகுறித்து விவாதங்கள் எழுந்தன. ஆனால், மேலாண்மை வாரியம் என்ற ஒன்று இல்லை என்றும், திட்டம் ஒன்று 6 வார காலத்துக்குள் நிறைவேற்றப் பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பதாகக் கூறி, கர்நாடக அரசு மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருந்த 6 வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு செல்ல உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுமாறு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு நிறைவேற்றப் படவில்லை என்றால் தீர்ப்பை கொடுத்தவர்களிடம் செல்வதுதான் சட்ட வழிமுறை என்றார் ஜெயக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories