உள்ளூர் செய்திகள்

குரங்கணி தீ விபத்து: உயிரிழப்பு 20 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி கேட்கக் கூடாது…! ஆனா ஸ்டாலின்கிட்ட கேக்கறாங்களே..!

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று கமல் பாணியில் யாரேனும் சொன்னால், அதுதான் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் தமிழ் வளர்த்த நிலை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்! 

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுக்கு சில கேள்விகள்?: சட்டமன்றத்தில் குரல் கொடுக்காதது ஏன்?

சட்டமன்றத்தில் குரல் கொடுக்கத்தானே தாங்கள் மன்ற உறுப்பினராக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்  பட்டீர்கள். இதற்காக தாங்கள் என்ன செய்யப்  போகிறீர்கள்?  - என்று கேள்வி எழுப்புகின்றனர்!

புதுவை பாஜக., எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் நியமனம் செல்லும்!

இந்த வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ்! நாளை முதல் சினிமா பார்க்கலாம்!

இன்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி உள்ளிட்டோரை திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்

டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது!

இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ், ரகு இருவரும் மெரினா காவல் நிலைய போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 
- 2026

36 ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகள்: உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

இந்த மனுக்களை எடுத்துக் கொண்ட நீதிபதி சுப்பிரமணியம், அவற்றைத் தள்ளுபடி செய்தார். மேலும், கோயில் வளாகத்தில் தொடர்ந்து கடைகளை நடத்த வேண்டும் என்று கேட்க எந்த சட்ட உரிமையும் இல்லை என்று கூறினார்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் கைது: சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை சாலைகளில் பள்ளி செல்லும் சிறுவர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதால் பல விபத்துக்கள் நடப்பதாக அடிக்கடி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தால் சாலையில் நடந்து செல்லும்...

ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் மனு: காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவு

அண்மையில் பெரியார் சிலை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகக் கூறி, அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. இந்தப் பின்னணியில், ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரி சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்று கொடுக்கப் பட்டது.

அந்த 75 நாட்களும் சிசிடிவி கேமராக்கள் எல்லாம்… அப்பல்லோ பிரதாப் ரெட்டியில் பகீர் பதில்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். மேலும்,  வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். 

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

கோவை தனியார் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, மதுரையிலிருந்து ஆம்புலன்ஸ் விமானத்தில் கோவை கொண்டு செல்லப்பட்டார் ஜெயஸ்ரீ.

மர்ம நபர்கள் செயின் பறித்த போது கீழே விழுந்த சுகாதார ஆய்வாளர் மரணம்

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மல்லிகா தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்தார்.
- 2026

Recent articles