December 5, 2025, 10:00 PM
26.6 C
Chennai

ஏட்டிக்குப் போட்டி; தி.க., ராமாயணம் பத்தி பேசினா… இ.மு., ஈ.வே.ராமணியம்மயணம் பேசும்..!

இப்போது ஆத்திக நாத்திக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாய் எல்லாம் எக்குத் தப்பாய் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், கருத்துரிமை என்ற பெயரில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சாதிய, மத வகுப்பு ரீதியிலான கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.

இதுவரையில் பிற சமூகத்தை, ஆன்மிக வழிபாடுகளை, ஆன்மிகத் தமிழ் நூல்களை கொச்சைப்படுத்தி, பிறர் மனம் புண்படுத்துவதையே  தங்கள் வாடிக்கையான அரசியலாகச் செய்து வந்த பெரியாரியவாதிகளுக்கு பதில் கொடுக்கிறோம் என்று இப்போது இந்து முன்னணியும் களத்தில் இறங்கியிருக்கிறது.

IMG 20180323 WA0107 e1521814352186 - 2025

மார்ச் 23 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6.30-8.30 பெரியார் திடலில் இராமாயணம் – இராமன் – இராம ராஜ்யம் என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி சொற்பொழிவு நிகழ்த்துவார் என்று போஸ்டர்கள் நகரில் ஒட்டப்பட்டன.

ஒவ்வொரு முறையும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் தி.க.வினரின் இது போன்ற செயல்கள் குறித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆட்சேபம் எழுப்பி, தங்கள் புகார்களை அளித்து வந்தனர். ஆனால், அவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப் பட்டதில்லை. இதனால் ஏட்டிக்குப் போட்டி என அவர்களும் களம் இறங்கியுள்ளனர்.

திராவிடர் கழகம் போஸ்டர் அச்சடித்து ஒட்டிய அதே நாளில் பதிலுக்கு பெரியார் மணியம்மை குறித்து இந்து முன்னணி சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும், இந்து முன்னணி அலுவலகத்திலேயே வைத்து இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் பதிலுக்கு தகவல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது.

IMG 20180323 WA0105 - 2025

இந்த ஆய்வு சொற்பொழிவை, ஈ.வெ.ரா.வின் மறுபக்கம் புத்தகத்தை எழுதிய மா.வெங்கடேசன் நிகழ்த்துவார் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது.

ஏற்கெனவே சிலை உடைப்புப் பேச்சு, அவமரியாதை, தகராறு, அதனால் எழுந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் என்று தமிழகம் கொந்தளிப்பில் கிடக்க,  ஏட்டிக்குப் போட்டி, பதிலுக்கு பதில் என்று இறங்கி விட்டதன் விளைவால் சமூகப் பதற்றம் மேலும் அதிகரிக்குமே தவிர, இதற்கு ஒரு முடிவு நிச்சயம் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததுதான்! அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்… என்ற கதையாகியுள்ளது இது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories