ஏட்டிக்குப் போட்டி; தி.க., ராமாயணம் பத்தி பேசினா… இ.மு., ஈ.வே.ராமணியம்மயணம் பேசும்..!

இப்போது ஆத்திக நாத்திக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாய் எல்லாம் எக்குத் தப்பாய் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், கருத்துரிமை என்ற பெயரில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சாதிய, மத வகுப்பு ரீதியிலான கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.

இதுவரையில் பிற சமூகத்தை, ஆன்மிக வழிபாடுகளை, ஆன்மிகத் தமிழ் நூல்களை கொச்சைப்படுத்தி, பிறர் மனம் புண்படுத்துவதையே  தங்கள் வாடிக்கையான அரசியலாகச் செய்து வந்த பெரியாரியவாதிகளுக்கு பதில் கொடுக்கிறோம் என்று இப்போது இந்து முன்னணியும் களத்தில் இறங்கியிருக்கிறது.

IMG 20180323 WA0107 e1521814352186 - 2026

மார்ச் 23 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6.30-8.30 பெரியார் திடலில் இராமாயணம் – இராமன் – இராம ராஜ்யம் என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி சொற்பொழிவு நிகழ்த்துவார் என்று போஸ்டர்கள் நகரில் ஒட்டப்பட்டன.

ஒவ்வொரு முறையும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் தி.க.வினரின் இது போன்ற செயல்கள் குறித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆட்சேபம் எழுப்பி, தங்கள் புகார்களை அளித்து வந்தனர். ஆனால், அவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப் பட்டதில்லை. இதனால் ஏட்டிக்குப் போட்டி என அவர்களும் களம் இறங்கியுள்ளனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

திராவிடர் கழகம் போஸ்டர் அச்சடித்து ஒட்டிய அதே நாளில் பதிலுக்கு பெரியார் மணியம்மை குறித்து இந்து முன்னணி சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும், இந்து முன்னணி அலுவலகத்திலேயே வைத்து இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் பதிலுக்கு தகவல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது.

IMG 20180323 WA0105 - 2026

இந்த ஆய்வு சொற்பொழிவை, ஈ.வெ.ரா.வின் மறுபக்கம் புத்தகத்தை எழுதிய மா.வெங்கடேசன் நிகழ்த்துவார் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது.

ஏற்கெனவே சிலை உடைப்புப் பேச்சு, அவமரியாதை, தகராறு, அதனால் எழுந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் என்று தமிழகம் கொந்தளிப்பில் கிடக்க,  ஏட்டிக்குப் போட்டி, பதிலுக்கு பதில் என்று இறங்கி விட்டதன் விளைவால் சமூகப் பதற்றம் மேலும் அதிகரிக்குமே தவிர, இதற்கு ஒரு முடிவு நிச்சயம் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததுதான்! அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்… என்ற கதையாகியுள்ளது இது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories