ஏட்டிக்குப் போட்டி; தி.க., ராமாயணம் பத்தி பேசினா… இ.மு., ஈ.வே.ராமணியம்மயணம் பேசும்..!

இப்போது ஆத்திக நாத்திக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாய் எல்லாம் எக்குத் தப்பாய் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், கருத்துரிமை என்ற பெயரில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சாதிய, மத வகுப்பு ரீதியிலான கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.

இதுவரையில் பிற சமூகத்தை, ஆன்மிக வழிபாடுகளை, ஆன்மிகத் தமிழ் நூல்களை கொச்சைப்படுத்தி, பிறர் மனம் புண்படுத்துவதையே  தங்கள் வாடிக்கையான அரசியலாகச் செய்து வந்த பெரியாரியவாதிகளுக்கு பதில் கொடுக்கிறோம் என்று இப்போது இந்து முன்னணியும் களத்தில் இறங்கியிருக்கிறது.

IMG 20180323 WA0107 e1521814352186 - 2026

மார்ச் 23 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6.30-8.30 பெரியார் திடலில் இராமாயணம் – இராமன் – இராம ராஜ்யம் என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி சொற்பொழிவு நிகழ்த்துவார் என்று போஸ்டர்கள் நகரில் ஒட்டப்பட்டன.

ஒவ்வொரு முறையும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் தி.க.வினரின் இது போன்ற செயல்கள் குறித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆட்சேபம் எழுப்பி, தங்கள் புகார்களை அளித்து வந்தனர். ஆனால், அவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப் பட்டதில்லை. இதனால் ஏட்டிக்குப் போட்டி என அவர்களும் களம் இறங்கியுள்ளனர்.

திராவிடர் கழகம் போஸ்டர் அச்சடித்து ஒட்டிய அதே நாளில் பதிலுக்கு பெரியார் மணியம்மை குறித்து இந்து முன்னணி சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும், இந்து முன்னணி அலுவலகத்திலேயே வைத்து இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் பதிலுக்கு தகவல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது.

IMG 20180323 WA0105 - 2026

இந்த ஆய்வு சொற்பொழிவை, ஈ.வெ.ரா.வின் மறுபக்கம் புத்தகத்தை எழுதிய மா.வெங்கடேசன் நிகழ்த்துவார் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது.

ஏற்கெனவே சிலை உடைப்புப் பேச்சு, அவமரியாதை, தகராறு, அதனால் எழுந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் என்று தமிழகம் கொந்தளிப்பில் கிடக்க,  ஏட்டிக்குப் போட்டி, பதிலுக்கு பதில் என்று இறங்கி விட்டதன் விளைவால் சமூகப் பதற்றம் மேலும் அதிகரிக்குமே தவிர, இதற்கு ஒரு முடிவு நிச்சயம் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததுதான்! அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்… என்ற கதையாகியுள்ளது இது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories