Breaking News
அன்வர் ராஜா மகன் திருமணம்: அழுது தீர்த்த அபலைப் பெண்ணால் ஜமாத் நிறுத்தி வைப்பு!
ஒரு முடிவுக்கு வராத நிலையில், காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசருக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில்லை என்று ஜமாத் முடிவு செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசன்னா பாடிய படி கிறிஸ்தவ மக்கள் ஊர்வலம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்: கட்டணத்தில் எழுந்த சர்ச்சைகள்!
1993ஆம் ஆண்டு சேலத்தில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான நகரங்களை இணைக்கும் ’உடான்’ திட்டத்தின் மூலம் சேலத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக் களமாகும் தமிழகம்! தூத்துக்குடியில் கடையடைப்பு!
`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணியினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
ஓசில டீ குடிச்சு பழகினவனுக்கு திடீர்ன்னு விலைய கேட்டா தலை சுத்தத்தான் செய்யும்
இத்தனை நாள் இவர் காபி டீயெல்லாம் எங்கேயும் காசு கொடுத்து வாங்கிக் குடித்ததில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்
தமிழகத்தைக் கலக்க வரும் தமிழ்க் கடவுள் முருகன் வேல் ரத யாத்திரை பாதை!
ராம ரதத்தினை அடுத்து தமிழகத்தைக் கலக்கி வருகிறது வேல் ரதம். இது மார்ச் 25 ஞாயிற்றுக் கிழமை இன்று ஆறுபடை வீடுகளில் துவங்கி பழனியில் நிறைவடைய இருக்கிறது.
ராம ரதத்தை அடுத்து தமிழகத்தைக் கலக்கும் தமிழ்க் கடவுள் முருகனின் ’வேல் ரதங்கள்’
யாத்திரையின் நிறைவாக மார்ச் 29-ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு மதுரையில் வேல் சங்கம மாநாடு நடைபெற உள்ளது. தங்கள் பகுதியில் பூஜையில் வைத்த வேலையும் அலங்கரித்து எடுத்து வர வேண்டுகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
யாருடன் இருக்கிறீர்கள்: கமல், தமிழிசை ட்விட்டர் யுத்தம்
யாருடன் இருக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தக் கோரும் விதமாக கமலுக்கு தமிழிசை ட்விட்டரில் பதில் கேள்வி கேட்டுள்ளார்...
ம.நடராஜன் படத் திறப்புக்கு ஏற்பாடு: என்ன செய்யப் போகிறார் சசிகலா ?
இதில் சசிகலா கலந்து கொள்வாரா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை. அவ்வாறு கலந்து கொண்டால் ஏற்படும் சட்டச் சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அவர் தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். எனவே அடுத்த வாரம் மீண்டும் அரசியல் வட்டாரம் பரபரத்துக் காணப்படும் என்பது மட்டும் உறுதி.
‘மக்களோட கஸ்டத்த பத்தி கவலப் படுங்க… அத விட்டுட்டு சிஸ்டத்த பத்தி பேசுறீங்க..?! ‘கல கல’ ஓபிஎஸ்
ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்னர்தான் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று ஸ்டாலின் ஏதோ பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸும் யானை பூனை என்று பேசவே, அனைவரும் அதனை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டனர்.
சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கதறக் கதற… தவிக்க விட்டவர்களை, பதறப் பதற தூக்கி அடிப்பேன்… இது ‘சசிகலா சபதம்’ !
எனவே, சசிகலாவின் பரோல் காலம் முடிவதற்குள் அ.தி.மு.கவில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் தன்னை வந்து பார்ப்பார்கள் என திடமாக நம்புகிறார் சசிகலா. பரோல் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று சிறை நிபந்தனைகள் இருந்தாலும், ஆளும் அரசுத் தரப்பு திக் திக் என்று நடப்பவைகளை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.