செவிலியரை அரிவாளால் வெட்டிய கணவர் கைது!

nurse murder attempt in karur - 2026

கரூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியரை அரிவாளால் வெட்டிய அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் வசிப்பவர் சத்தியா. வயது 40. இவர் காணியாளம்பட்டியை அடுத்த உடையாபட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சதீஸ்குமார் என்பவருடன் திருமணமாகி அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணியில் இருந்த சத்தியா, காணியாளம்பட்டியில் இருந்து உடையாபட்டியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சுக்காம்பட்டி என்கின்ற கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்த மர்ம நபர் அவரை அரிவாளால் கையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

Screenshot 2021 03 03 00 42 32 44 - 2026

அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் கிராம மக்களிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் சத்தியாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இது தொடர்பாக தோகைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சத்தியாவின் கணவர் சதீஸ்குமாரே அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது.

இருவருக்கும் திருமணமாகி 16 வயதில் மகள் இருக்கையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர், மனைவி பிரிந்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்த நிலையில் சுங்ககேட் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவருடன் சத்தியா தவறான தொடர்பு வைத்திருந்ததால் அவற்றை நிறுத்தும்படி எச்சரித்துள்ளார் சதீஸ்குமார்.

ஆனால், அவர்களின் உறவு நீடித்ததால் செவிலியரை அரிவாளால் வெட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கொலை நடந்து சில மணி நேரத்திலேயே கொலையாளி கைது செய்து சிறையில் அடைத்தது தோகைமலை போலீசார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories