இரண்டாம் திருமணம் செய்த நபர்; முதல் மனைவி போராட்டத்தால்… போலீசார் வழக்குப் பதிவு!

karur lady on protest - 2026

வெந்தபட்டியில் 2வது திருமணம் செய்த நபர் உட்பட 5 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வெந்தபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பிரியதர்ஷினி. இவர் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்று கணவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதில் கதிர்ச் செல்வன், ஒன்றரை வயதில் மித்திரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். டிரைவராக வேலை பார்த்து வந்த கணவர் மணிகண்டன் அடிக்கடி மது அருந்திவிட்டு வண்டி, நகை, பணம் கேட்டு பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு உடந்தையாக மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோரும் சேர்ந்துகொண்டு பணம், நகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

கொடுமைகள் தாங்க முடியாமல் கடந்த வருடம் கணவர் மணிகண்டன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார் என குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால் மணிகண்டன், மகாலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்து, பிரசவத்திற்காக மகாலட்சுமி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த 22ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது என கூறப்படுகின்றது.

karur lady on protest1 - 2026

எனவே தன்னையும் தனது குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மணிகண்டனை கைது செய்தும், திருமணத்திற்கு துணைநின்ற மாமனார் மருதை, மாமியார் நவமணி, கொழுந்தனார் ராஜா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனு ஒன்றை நேற்று குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது 2 மகன்களுடன் பேருந்துநிலையம் காந்திசிலை முன்பு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தார். அதனையடுத்து பிரியதர்ஷனியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த மணிகண்டன், மணிகண்டனின் தந்தை மருதை, தாயார் நவமணி, சகோதரன் ராஜா, மணிகண்டனின் 2வது மனைவி மகாலெட்சுமி ஆகிய 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று 23ந்தேதி வழக்குபதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories