மணப்பாறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்..

IMG 20221204 WA0058 - 2026
IMG 20221204 WA0057 - 2026

மணப்பாறை அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மணப்பாறையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்திய முனிவர், தாயுமான சுகசித்தர் வழிபட்ட திருத்தலமான அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றுள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் இத்தலம், அகத்திய முனிவர், தாயுமான சுகசித்தர் வழிபட்ட திருத்தலமாகும்.

இங்குள்ள அம்பிகை மகாலெட்சுமி சொரூபமாக தனது இரு கைகளிலும் தாமரை மலரை வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையால் சில மாதங்களாக ஆதிகாலத்து முறையில் திருப்பணியானது கருங்கல் வர்ண வேலைபாடுகளுடன் புணரமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் யாக வேள்விகள் நடைபெற்று இன்று காலை மங்கள இசையுடன் ஆறாம் காலம் யாக வேள்வி நடைபெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கும்பங்கள் சிவ பூதகண திருக்கைலாய வாத்திய இசையுடன், மேளத்தாள வாத்தியம், நாதஸ்வர இசையுடன் விமானம் வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமானம், மூலவர் மஹா குமாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாள் விமானம், பரிவார தெய்வாங்களின் விமானங்கள் புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹாதீபாராதணை நடைபெற்றது.

பின் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories