தமிழகத்தில் முதல் இன்புளுயன்சா உயிரிழப்பு..

viluppuram 12 16784644883x2 1 - 2026

தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545  பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எச்3என்2 என்ற இன்புளுயன்சா வகை காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இன்புளுயன்சா காய்ச்சலுக்கு நாடு முழுவதும் ஒரு சில உயிரிழப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை உயிரிழப்பு என்பது பூஜ்ஜிய நிலையில் இருந்தது. இதனிடையே திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த 27 வயது இளைஞர், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றுவிட்டு குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9ம் தேதி திருச்சிக்கு வந்துள்ளார்.

10ம் தேதி இளைஞருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல்நல கோளாறும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில மரபணு பகுப்பாய்வு மையத்தில் பரிசோதனை செய்ததில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா மற்றும் இன்புளுயன்சா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் இன்புளுயன்சா உயிரிழப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories