ஜுடோ போட்டி: தொடர்ந்து 13வது முறையாக சாம்பியன்ஷிப் வென்ற கரூர் பள்ளி!

karuru barani park school in judo competition - 2026
தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 13வது முறையாகப் வென்று கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள், சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவரும் பரணி வித்யாலயா முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஜூடோ பயிற்சியாளர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி வாழ்த்தும் பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், சிபிஎஸ்இ தென் மணடல துணை செயலாளர் பரமசிவம், கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர்.

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜுடோ போட்டி: தொடர்ந்து 13வது முறையாக சாம்பியன்ஷிப் வென்றது கரூர் பரணி வித்யாலயா!

இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்களில் இருந்து 138 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி 11.07.2025 முதல் இன்று 13.07.2025 வரை கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் சேர்த்து மொத்தம் 63 எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி 21 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் வென்று 155 புள்ளிகள் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து தென் மண்டல சிபிஎஸ்இ ஜூடோ சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 13-வது முறையாக வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து வேளாங்கண்ணி பள்ளி 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் வென்று 26 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி 4 தங்கம், 1 வெண்கலம் வென்று 21 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டி பரிசளிப்பு விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி தலைமை தாங்கினர். சிபிஎஸ்இ தென் மணடல துணை செயலாளர் பரமசிவன், கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவரும் பரணி வித்யாலயா முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஜூடோ பயிற்சியாளர்கள் துரை, முத்துலட்சுமி, கார்த்திக், பார்த்திபன், சங்கீதா ஆகியோரைப் பாராட்டி வாழ்த்தினர். விழாவில் பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாராசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

மொத்தம் 63 எடை பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற 136 வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் மாதம் இராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய சிபிஎஸ்இ ஜூடோ போட்டிகளில் ‘தென் மண்டலம்’ சார்பாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories