சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக சந்நிதி பிரதிஷ்டை கோலாகலம்!

Published:

sabarimala navagraha kumbabishekam - 2026

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நவகிரக சன்னதி கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13ல் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகள் பிரதிஷ்டை சபரிமலை தந்திரி பிரம்மஶ்ரீ கண்டரரு ராஜீவரரு தலைமையில் இன்று நடைபெற்றது

சபரிமலையில் சுவாமி ஐயப்பன் கோயில் அருகே உள்ள மாளிகைபுரம் மஞ்சமாதா கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி இன்று நடைபெற்றது. இதற்காக சபரிமலை நடை ஜூலை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெற்றது .

ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெற்றன .ஜூலை 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் இன்று காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெற்றது.

இன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தொடங்கியது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சபரிமலையில் மிதமான மழை பெய்து வருகிறது.பம்பை நதியில் தூய நீரில் பக்தர்கள் நீராடி சென்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img