செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

karur mr vijayabhaskar - 2026

செந்தில்பாலாஜி சிறை செல்வது உறுதி – கரூர் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூளுரைத்தார்.

கரூர் மாவட்டம், புலியூரில், அதிமுக கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் , பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக மக்களை ஏமாற்றிய மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிவதாக, ஒரு நாடகத்தினை நடத்தி பெட்டி பெட்டியாக மனுக்கள் வாங்கினார். தற்போது அந்த பெட்டியின் சாவியை மறந்து விட்டார்.

அவரை தொடர்ந்து ஸ்டாலின் மகனும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக நாடகமாடி பின்னர் தற்போதும் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று மக்களிடம் பொய் கூறி ஏமாற்றி வருகின்றார். இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார். ஏற்கனவே விஞ்ஞான ரீதியான முறையில் முறைகேடு செய்து அதனை தற்போதைய முதல்வர் அன்று பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆனால் அவருக்கே தற்போது அமைச்சர் பதவியும் கொடுத்து உள்ளார் ஸ்டாலின்,

அங்கேயும் கிட்சன் கேபினெட் நடத்தி வருகின்றார். மு.க.ஸ்டாலின் மருமகனை பிடித்து தற்போது அமைச்சர் பதவியை பிடித்துள்ளார். இங்குள்ள ஒவ்வொரு திமுக காரனும் எதிர்பார்த்து கொண்டு உள்ளார்கள்.

நமது எதிர்கட்சித்தலைவரும், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரகட்சிஎடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே சொன்னது போல சொத்துவரியை ஏத்தி விட்டார்கள், மின்சார கட்டணம் விலை உயர்வு அடுத்தது மக்களுக்கு திமுக அரசின் பம்பர் பரிசாக, பஸ் கட்டண உயர்வுடன் அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கின்றது. மேலும், போக்குவரத்து துறையில் ஈவிஎம் மெஷின் உள்ளிட்ட மெஷின்களில் முறைகேடு செய்து பல கோடி சுருட்டிய நம்மூர் விஞ்ஞானி (செந்தில்பாலாஜி) திமுக விற்கு சம்பாதிப்பதற்காக அடுத்து மின்சாரத்துறையில் ஓவ்வொரு வீட்டிற்கும், மின் கட்டணத்தினை அறியும் மீட்டரில் டிஜிட்டல் முறை என்று கூறி ஸ்மார்ட் மீட்டர் ஒன்றினை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கோடிகளை சுருட்ட பிளான் செய்துள்ளார். ஆனால், ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதை தற்போது உச்சநீதிமன்றமே தூசி தட்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றது.

ஆகையால் நம்மூர் விஞ்ஞானி (செந்தில்பாலாஜி) விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி என்றும். நம் கட்சியினை அழிக்க திமுக கட்சி சதி செய்து வரும் நிலையில். நம் அதிமுக கட்சி எப்போதும் ஒற்றைத்தலைமை தான் அது நமது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி மட்டுமே, ஒரு சிலர் போல தர்மயுத்தம் என்று சொல்லி நாடகமாடி, நம் இயக்கத்தின் விரோதிகளான திமுக கட்சியுடன் உறவாட மாட்டார்கள். திமுக கட்சியையும், ஆட்சியையும் புகழ்ந்து சொல்பவர்கள் நம் இயக்கத்திற்கு துரோகம் செய்பவர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அன்றே சொன்னார். தீய சக்தி கருணாநிதி, திமுக என்றுமே மக்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள், அவரது கூற்றுக்கும், நம் புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்து விட்டு ரகசிய உடன்பாடு வைத்துள்ளவர்கள் நம் இயக்கத்திற்கு எதிரானவர்கள் ஆவர்கள், நம்முடைய தொண்டர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள், நம் கட்சி 100 சதவிகிதம் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு தெரிவுத்து வருகின்றனர் என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories