
இன்று விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் யார் அந்த சார் ?? வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மண்ணின் மைந்தர் ஆர்.கே ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்க்கோட்டை சுப்ரமணியம் நகர கழக செயலாளர் சோலை சேதுபதி, திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் முனியாண்டி, முத்து ராமலிங்கம், கருப்பசாமி மற்றும் சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, சீத்தாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் இரா.சக்ரவர்த்தி சங்கர் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகி பிரேமா, சீரணி ரமேஷ்,அண்டா நாகராஜ், இ.சுப்ரமணி மற்றும் பாசறை நிர்வாகிகள் க.பாலாஜி, s.பாலாஜி, இரா.சக்திராஜா, விக்னேஷ், கேப்டன் பிரபாகரன், சங்கர் பிரபு, சண்முகராஜன், உடனிருந்தனர்





