April 19, 2025, 1:39 AM
30 C
Chennai

தமிழக அரசே, போதைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இளைஞர் நலனை உறுதி செய்க!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் உறுதி செய்வதுடன் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், போதையின் பாதையில் பலியாவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, இந்து இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி. சண்முகம் அறிக்கை மூலம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:

அன்றாடம் வெளியாகும் ஊடக செய்திகள் மூலம் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. இதனால் நாட்டின் எதிர்காலமாகிய மாணவ சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்கள் சுயநலத்திற்காக ஒருசில சமூகவிரோதிகள் அப்பாவி மாணவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி போதைக்கு அடிமையாக்கி அவர்களது எதிர்காலத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாணவர்களையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளராக மாற்றும் அவல நிலையும் சமீபகாலமாக வெளிவரும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. அந்த வகையில் போதை பொருள் விற்பனை கும்பல்களின் கொடுஞ்செயல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இது மாணவர் சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.

ALSO READ:  தமிழகத்தில் பாஜக., வலிமை... இனி என்ன ஆகும்!

உதாரணமாக, நேற்றைய தினம் சிதம்பரம் பகுதியில் உள்ள சமூகவிரோதிகள் சிலர் ஐடிஐ மாணவர்களை கஞ்சா விற்க கட்டாயப்படுத்துவதுடன் மறுப்பு தெரிவித்தவர்களை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதேபோல தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் சிலர் மதுபானம் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதாக சட்டக் கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நபர் மாணவியின் வீட்டிற்கே சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை இச்சம்பவத்தில் மாணவியை தாக்கியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்று அம்மாணவி தெரிவித்துள்ளார். காவல்துறையின் இத்தகைய அலட்சியம் சிறிதும் ஏற்புடையதல்ல.

கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்தவர்கள்மீது புகார் கொடுத்த இரண்டு இளைஞர்களை கள்ளசாராய கும்பல் வெட்டிகொன்றது நாடறிந்ததே. அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஆபத்து இருப்பதை காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையின் மெத்தன போக்கால் கொலையானார்கள், அந்த வகையில் தற்போது கம்பம் பகுதியை சேர்ந்த சட்டகல்லூரி மாணவி தாக்கப்பட்டும் வழக்கு பதியாமல் காவல்துறை மெத்தனமாக செயல்படுவது கடும் கண்டனத்துகுறியது.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸி.,யை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இந்தியா!

அன்றாடம் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது நம் மாநிலத்தில் போதை கும்பல்களின் ஆதிக்கம் சாதாரண பள்ளிக்குழந்தைகள் வரை நீண்டுள்ளதாகவே தெரியவருகிறது. ஆனால் இதை தடுக்க வேண்டிய காவல்துறையும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்வரும் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகவே நடக்கும் சம்பவங்கள் எடுத்துகாட்டுகிறது. மாநில அரசின் இவ்வாறான மெத்தனபோக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக அமையும் என்றால் மிகையில்லை.

போதைபொருள் விற்பனை கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என சூளுரைக்கும் தமிழக முதல்வரின் பேச்சு வெறும் வார்த்தை ஜாலங்களாகவே நின்றுபோகிறது என்பதில் ஐயமில்லை.

எனவே தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா போதை கும்பல்களின் மீதும் அவர்களது கூட்டாளிகளாக செயல்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து மாணவச் செல்வங்களது வாழ்வை காக்குமாறு இந்து இளைஞர் முன்னணி கேட்டுக்கொள்கிறது…

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories