தரிசன கட்டணக் கொள்ளை மூலம் கோயில்களில் நவீன தீண்டாமை!

kadeswara subramaniam hindu munnani - 2026

அறநிலையத்துறையின் தரிசன கட்டண கொள்ளை தொடருகிறது!
பிரேக்கிங் (இடைநிறுத்தம்) தரிசனம் என்ற பெயரில் நவீன பொருளாதார தீண்டாமையை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டமன்ற 2025 -2026 மானிய கோரிக்கை எண் 47 இன் படி பெருவாரியான பக்தர்கள் வருகை தருகின்ற திருக்கோவில்களில்
பிரேக்கிங் தரிசன முறை ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்.

பெரிய கோவில் வரிசையில் திருச்செந்தூரில் இது முதலாவதாக அமல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெருவாரியான பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற சிறிய மற்றும் பெரிய கோவில்களின் நிலைமை பரிதாபகரமான நிலையில் உள்ளது.

திருவிழாக்கால சிறப்பு பேருந்து கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், பிரசாத கட்டணம் என வசூல் கொள்ளை செய்யும் நிலையங்களாக அறநிலையத்துறை மாறி இருக்கிறது. இதில் பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது.

ஆகம விதிகளின்படி மதியம் உச்சி பூஜை முடிந்த பிறகு கோயில்களை சாத்துவது என்பது வழக்கமாக உள்ளது. ஆனால் கட்டணம் வசூலிக்கும் நோக்கோடு ஆகம விதிகளுக்கு எதிராக மதியம் மூன்று மணி முதல் 4 மணி வரை கோவில்களை திறந்து வைக்கலாம் என அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது.

இடை நிறுத்த தரிசனமே தவறு என்கிற போது 500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது கடவுளை காட்சிப் பொருளாக்கும் நியாயமற்ற அரசின் நிர்வாகத்தைக் காட்டுகிறது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் ஒரு மணிக்கு மேலாக கட்டணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. சினிமா தியேட்டர்கள் போன்று காலை, மதியம், இரவு காட்சி என கோவில்களை மாற்றுவது கோவில்களின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலாகும்.

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கடந்த இரண்டு மாத காலமாக திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருக்கக் கூடிய அவல நிலையை காண முடிகிறது. ஏழை பக்தர்கள் வரிசையில் நின்றிருக்க ஒருபுறம் கட்டண தரிசனமும், மறுபுறம் கையில் காசை வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு ஒரு சிலரை அனுமதிப்பதும் பக்தர்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது.

முருகனின் அறுபடை வீடான திருத்தணியில் கோவில் ஊழியர்களுக்கும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் தொடர்ந்து கைகலப்பு ஏற்படுவதும் தரிசன முறைக்கு பணம் பெற்றுக் கொண்டு ஒரு சிலரை உள்ளே விடுவதால்தான் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு பக்கம் கோவில்களில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தருவதில்லை. மறுபுறம் சிதிலமடைந்த கோவில்களை செப்பனிடுவதும் இல்லை. பெரிய கோவில்களின் வருமானத்தையும் உண்டியல் பணத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடிய அறநிலையத்துறை சிறிய கோவில்களில் ஒரு கால பூஜையைப் பற்றி கூட கவலைப்படுவதில்லை. 37 ஆயிரம் கோவில்களில் விளக்கு எரியும் வசதி இல்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தன் வாதத்தை எடுத்து வைக்கிறது.

அறநிலையத்துறையின் அவலங்களை நீதிமன்றம் பலமுறை கண்டித்தும் கூட
இதுவரை கோவில்கள் விஷயத்தில் தமிழக அரசு அக்கறையின்றி இருந்து வருகிறது.

பிரேக்கிங் தரிசன கட்டணத்தின் அரசாணையின் முன் உதாரணமாக திருச்செந்தூர் கோவிலில் திருவிழா காலங்களை கழித்து மீதமுள்ள நாட்களில்
இடை நிறுத்த தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் அது குறித்த ஆட்சேபனைகள், ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் கோவில் இடிப்பு, தரிசன கட்டணம் உயர்வு, கும்பாபிஷேகத்தில் முறைகேடு என அறநிலையத்துறையின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தபடியே உள்ளன. எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு கோவில்களின் பாரம்பரியம் நடைமுறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய திமுக அதன் நிஜ முகத்தை காட்டுகிறதா? என்ற கேள்வியும் தமிழக மக்களிடம் எழுந்திருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்திற்கு கூட ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என முதலில் அறநிலையத்துறை அறிவித்திருந்தது.இதை பக்தர்கள் கடுமையாக எதிர்த்ததால், இந்த கட்டடண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் நடந்த பல பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்தில் பொதுமக்களும் பக்தர்களும் கும்பாபிஷேக நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. மாறாக திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருச்செந்தூரில் பால்காவடி எடுத்து வந்த பக்தர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் தாக்கப்பட்டனர்.

இப்படியாக அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இடைநிறுத்த தரிசனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அறநிலையத்துறை. தனது முடிவை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர்க்கும் பட்சத்தில்
ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளும் திமுக அரசு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கிணங்க மானிய கோரிக்கையின் பிரேக்கிங் தரிசன கட்டண முறையை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories