ஓணம் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்..

Published:

1000926301 1 - 2026

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சபரிமலை குருவாயூர் கோயிலில் ஓணம் சிறப்பு பூஜை வழிபாடுகள் ஓணவிருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு திருவோணவில் சார்த்தி பூஜை வழிபாடுகள் நடத்தி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1000926170 - 2026

தமிழ்நாட்டில் தை பொங்கல் விழா சிறப்பு என்றால், கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு. தமிழ் மாதம் ஆவணியில் திருவோண நட்சத்திர நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இன்று (செப்டம்பர்) 5-ந்தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த மாநிலமான கேரளாவிற்கு வருவார்கள்.ஓணம் பண்டிகை ஆவணி மாதத்தில் அஸ்தம் (அத்தம்) நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விஷாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று இறுதியாக திருவோணம் நட்சத்திரம் வரை என 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

1000926169 - 2026

இறுதி நாளான திருவோணம் நட்சத்திரத்துக்கு உரியநாளான வருகிற 5-ந்தேதி வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் சத்யா எனப்படும் பிரமாண்ட சைவ விருந்து வைத்து புத்தாடை உடுத்தி மகாபலி ராஜாவை வரவேற்கும் விதமாக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.இன்று செப் 5-ந் தேதி இந்த உன்னத விழா ஓணம் பண்டிகை சிறப்பாககொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் தொடக்க விழா எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித் துறை நகராட்சி மற்றும் கேரள சுற்றுலா துறை சார்பில் கடந்த ஹஸ்தம் நாளில் அத்தப்பூ கோலம் மலர் ராஜவீதிகளில் அத்தசமயம் எனப்படும் பாரம்பரிய கலாசார ஊர்வலத்துடன் தொடங்கியது. கேரள உள்ளாட்சி துறை மந்திரி ராஜேஷ் கலை விழாவை தொடங்கி வைத்தார். நடிகர் ஜெயராம் கலாசார ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
1000926296 - 2026

இந்த ஊர்வலத்தில் கேரளாவின் பாரம்பரிய புலிக்களி கலைஞர்கள் உள்பட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான ஓணம் வாரவிழா திருவனந்தபுரத்தில் செப் 3-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளிலும், கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது இரவை பகலாக்கி சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கிறது.9-ந் தேதி ஓணம் வாரவிழா நிறைவாக திருவனந்தபுரம் கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை கேரளாவின் பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை, கலாசார ஊர்வலமும் நடைபெறும்.

கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், இன்று, 5ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி வியாழக்கிழமை முதல், நான்கு நாட்களுக்கு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்திராட நட்சத்திரம் நாளான நேற்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாலக்காட்டில் அரசு சார்பு நிகழ்ச்சிகள், நேற்று மாலை 5:30 மணிக்கு, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமானது. அட்டப்பாடி மற்றும் மலம்புழா பூங்காவிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், நேற்றிலிருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. கேரளா அரசு கட்டடங்கள், கோவில்கள், முக்கிய பகுதிகள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
1000926287 - 2026

திருச்சூர் மாநகராட்சியில், செப்., 8ம் தேதி புலியாட்டம் நடக்கிறது. திருச்சூர் மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ஏராளமானோர், புலி, சிறுத்தை வேடமிட்டு, மேல தாளம் முழங்க வீதி உலா வர உள்ளனர். அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நிகழ்வையொட்டி நடைபெற உள்ளது. புலியாட்டத்தை கண்டு மகிழ தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என்பதால், சிறப்பு பஸ்களை இயக்க, கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் உத்ரட்டாதி நாளில் பிரசித்தி பெற்ற மஹாவிஷ்ணு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரு ஆரண்முழா பார்த்தசாரதி கோயில் பம்பை நதியில் நூறு அடி நீளமுள்ள பாம்பு படகுகள் பங்கேற்று மாபெரும் படகு போட்டி நடைபெறும்.

1000926276 1 - 2026

சபரிமலை குருவாயூர் கோயிலில் இன்று ஓணம் சிறப்பு பூஜை வழிபாடுகள் திருவோணவிருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் அதிகாலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு மாலையில் திருவோணவில் சார்த்தி பூஜை வழிபாடுகள் நடத்தி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கேரளாவில் பெரும்பாலான வீடுகளில் வாசலில் மிகப்பெரிய அத்தப்பூ கோலம் போட்டு மரங்களில் ஊஞ்சல் கட்டி போன விருந்து படைத்து திருவோண பண்டிகை இன்று மிக விமர்சையாக கேரள மக்கள் கொண்டாடினார் கேரளா மட்டும் இல்லாது தமிழகத்திலும் இப்ப பண்டிகை பல்வேறு பகுதிகளில் விமர்சையாக நடைபெற்றது தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தானுமாலய மூர்த்தி கோவில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் கன்னியாகுமரி பகவதி கோவில் உட்பட பல்வேறு கோவில் வீடுகளில் திருவோணம் பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது ஓணம் பண்டிகை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்திர சயன பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img