February 21, 2026, 6:12 AM
24.6 C
Chennai

கோவில் பாதுகாப்பு கேள்விக்குறி! இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani
hindumunnani

கோவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது; தமிழக அரசு அலட்சியம் செய்வதை இந்து முன்னணி கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
 
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் உண்டியல் உடைத்து திருட திருடர்கள் வந்துள்ளனர். திருடர்களைத் தடுத்த இரு காவலர்களை கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்துள்ளனர். கோவிலில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கொலை செய்யும் அளவு துணிச்சல் வருவதற்கு காவல்துறையின் மெத்தனபோக்கே காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
 
தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை சம்பவம் பெருகி வருகின்றது. மேலும் திருக்கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நகைகள் ஏதேனும் திருடுபோய் உள்ளதா என்பது போன்ற தகவல்களும் ஏதும் வெளிவரவில்லை.
 
இரவு நேரங்களில் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முறையான ரோந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட தவறுவதே காரணமாக அமைகிறது.
 
தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் சுவாமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே திகழ்கிறது.
 
திருக்கோவில்களில் பெயரளவில் காவலாளிகளை நியமிப்பதை விடுத்து பிற அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கொடுத்து முன்னாள் ராணுவ வீரர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
 
மேலும் இக்கொலை சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை விரைந்து கைது செய்திடவும், கோவிலை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த இருவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories