spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி... ரூ.30 லட்சம் இழந்து... உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..!

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி… ரூ.30 லட்சம் இழந்து… உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..!

- Advertisement -
man-suicide-puduchery-on-online-rummy
man-suicide-puduchery-on-online-rummy

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் பணத்தை இழந்து, அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. ஒவ்வொரு நாளும் இது குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆயினும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் இருந்து விடுபட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிரமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தராக உள்ளார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

விஜயகுமார் ஆன்லைன் கேம்களை குறிப்பாக rummy விளையாடுவதை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். இதில் ஆரம்பத்தில் வெற்றி பெற்று ஓரளவு பணம் சம்பாதித்துள்ளார். இதனால் ஆன்லைன் கேம்களால் ஈர்க்கப்பட்டு தன்னிடம் உள்ள பணத்தை வைத்தும், கடன் வாங்கியும் விளையாடி உள்ளார். ஆனால், பணம் அனைத்தையும் விளையாட்டில் இழந்துள்ளார் விஜயகுமார்

இதனிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் இரு தினங்களுக்கு முன் இரவு மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் விஜயகுமார். வெகுநேரம் ஆகியும் கணவன் வீட்டுக்கு வராததை அடுத்து மறுநாள் காலை கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மதுமிதா.

இந்நிலையில் கோர்க்காடு அருகே உள்ள நத்தமேடு ஏரிக்கரையில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அது விஜயகுமாரின் உடல்தான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பதிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அவரது மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் விஜயகுமார் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில், என் பிணத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கும் என்று கடைசியாக அனுப்பிள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ரூ.30 லட்சம் மட்டுமல்ல… எல்லாமும் இழந்து தீக்குளித்து உயிரை விட்ட இளைஞரின் ஆடியோ மெசேஜின் எழுத்து வடிவம் இது.. என்று குறிப்பிட்டு, வாட்ஸ் அப் வாயிலாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்துக்கு யாரும் அடிமையாகாதீங்க, அதுக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடமா இருக்கட்டும் என்று குறிப்பிட்டு உலாவரும் அந்த மெசேஜ்….

online-rummy
online-rummy

என்னை மன்னிச்சிடு மதி. என்னால ஒன்னும் பண்ண முடியல மதி. தூங்காம கண்ணெல்லாம் மங்கலா தெரியுது. உடம்பெல்லாம் போயி வீக் ஆயிடுச்சி மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடல மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்ருக்கேன். தப்புதான். போதைமாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது.

அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட காசை புடிச்சிடலாம், இந்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமெண்ட் விளையாடிட்டேன் மதி. கடைசி வரைக்கும் அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. தெரிஞ்சும் விளையாடினேன். இப்போக்கூட எனக்கு விளையாடனும்னு தோனுது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு தெரியல.

நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்ணேன் மதி. பசங்கள பாத்துக்கோ. ரெண்டு அக்கவுண்ட்லயும் கொஞ்சம் கொஞ்சம் காசு இருக்கும். இப்போக்கூட அந்த ஆன்லைன் ரம்மி மேல் ஆப்ல இருந்து 17,000 ரூபாய் உன் அக்கவுண்டுக்குத்தான் ரீடம் பண்ணிருக்கேன். அது திங்கக்கிழமை உனக்கு கிரெடிட் ஆயிடும். இடத்தை வித்துடு. நகையெல்லாம் வித்துட்டு மதுரையில உங்க அம்மா வீட்டுக்குப் போயி செட்டில் ஆயிடு. ஏன்னா எங்க வீட்டுலல்லாம் யாரும் உன்னை அந்தளவுக்கு பாத்துக்க மாட்டாங்க. என்னை மட்டும் மறந்துடாத மதி (உடைந்து அழுகிறார்). ஒன்றரை வருஷத்துல வாழ்க்கை இப்படி மாறிடுச்சி. எப்படி ஓடி ஓடி சம்பாரிச்சேன் தெரியுமா ? டிஸ்ட்ரிபியூஷன்ல அப்படி இருந்தேன் நான்.

இன்னைக்கு அந்த நெட்வொர்க்ல கேவலமா இருக்கேன். என்னால வேலையே செய்ய முடியல. அந்தளவு லட்சக் கணக்குல சம்பாரிச்சேன். ஆனால் இன்னைக்கு என் மூளை வேலை செய்யல. எல்லாமே மங்கிப் போயிடுச்சி. ஒரு காலத்துல இந்தியன் மொபைல் டிஸ்டிரிபியூஷன் பேரு தமிழ்நாட்டுக்கே தெரியும். அந்தளவுக்கு என் பேரை ஃபேமஸ் பண்ணி வெச்சிருந்தேன்.

ஆனால் இந்த ரம்மில நான் அடிக்ட் ஆனதால என்னால பிசினஸ் பண்ணவே முடியல. பசங்கள ஒழுங்கா பாத்துக்க முடியல. உன்னை என்னால பாத்துக்க முடியல. என்னைவிட்டு எல்லாமே போயிடுச்சி. என்னால என்னை மாத்திக்க முடியல. எனக்கு இதவிட்டா வேற வழியே தெரியல மதி. அந்த ஐடியாவுல (சிம்கார்டு நிறுவனம்) ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல இருக்கு. அக்கவுண்ட்ல கொஞ்சம் கேஷ் இருக்கு.

அது இல்லாம வீட்ல அந்த மஞ்சப் பையில கொஞ்சம் கேஷ் இருக்கு. பசங்கள பாத்துக்க மதி. இன்சூரன்ஸ், பாரதியார் பேங்கெல்லாம் க்ளோஸ் பண்ணிடு. ஒரு ரூபா, ரெண்டு ரூபாயா இருந்தாலும் எல்லாத்தையும் சுருட்டி ஒரே அமௌண்டா ஆக்கி எடுத்துட்டு உங்க ஊருக்குப் போயி. 5 லட்ச ரூபாய் இருந்தாலும் அத பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டியை வாங்கி பசங்கள பாத்துக்க.

பசங்கள என்னை மாதிரி வாழ விடாத மதி. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கற விஷயத்த எல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எதுலயாவது போட்டு என் வாழ்க்கை அழிஞ்சி போச்சி, எம்புருஷன் செத்துட்டான்னு போட்டு ஆன்லைன்ல நடக்கற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு.

அது எனக்கு மனத்திருப்தியை அளிக்கும். இன்னைக்கு நான் சாகறதுக்கு முழு காரணமும் அதான். என்னைப் போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. என்ன முடிவுல விளையாடறானுங்கன்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியை எல்லாம் இழுத்து மூடிடு மதி.

எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தை விட்டு நான் போறேன். பாப்பாவை பாத்துக்க மதி. பாப்பாவை கூட கூட்டிக்கிட்டு போயிலாம்னுதான் பாத்தேன். அந்த காரியத்தை பண்ண தைரியம் இல்ல எனக்கு. அப்பா இல்லாம எம்பொண்ணு எப்படி வாழுவான்னு தெரியல. இந்த ஆவியெல்லாம் உண்மையா இருந்தா உங்க கூடவேதான் இருப்பேன். உங்கள பாத்துக்கிட்டேதான் இருப்பேன்.

நான் எங்க செத்துக் கெடக்கறேனோ அங்கதான் என் வண்டியும், சின்ன போன், பெரிய போன் ரெண்டுமே என் வண்டிலதான் இருக்கு. சின்ன போனை பிரபு சாருகிட்டக் குடு. அவர் ஈ.சி பண்ணி அதை அமௌண்டா ஆக்கிடுவாரு. என்னை விட்ருங்க சந்தோஷம். எல்லாரும் என்னை முட்டாள், பைத்தியக்காரன்னு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மதி. ஆனால் என்னால முடியல.

என் மைண்ட் என்ன விட்டுப் போயிடுச்சி. எனக்காக ஒரே விஷயம் பண்ணு. இந்த ஆன்லைன் கேம் எல்லாத்தையும் தடுக்கற மாதிரி முடிஞ்ச அளவுக்கு எல்லா குருப்லயும் ஷேர் பண்ணி விடு. என்னாலயாவது அது நின்னதா இருக்கட்டுமே. நானே கடைப்சியா இருக்கட்டும். எனக்கு அதாவது சந்தோஷமா இருக்கும். நான் எவ்ளோ அமௌண்ட் விட்டேன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா என் ஆந்திரா பேங்க் அக்கவுண்டையும், உன் இந்தியன் பேங்க் அக்கவுண்டையும் எடுத்து நீ செக் பண்ணா உனக்குப் புரியும். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அமௌண்ட் அது. அதையெல்லாம் என்னால சம்பாரிக்கவே முடியாது.

ஆனால் சம்பாரிச்சி விட்டுட்டேன். பச்சையப்பன்கிட்ட பத்திரம் மாட்டிக்கிட்டு இருக்கு. அத மூட்டு வித்து கடனை அடைச்சிடு. நீ உன் அம்மாகூட பேச ஆரம்பிச்சிட்டா மாறிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ வாழு. பசங்கள பாத்துக்க. ஐ லவ் யூ மதி. நன்றி”.

ஆன்லைன் சூதாட்டத்தினால் தீ குளித்து உயிரிழந்த புதுச்சேரி இளைஞர் தனது மனைவிக்கு வாட்சப்பில் அனுப்பிய ஆடியோ

Dream 11 – விளையாடும் அன்பர்கள் கவனமாக இருக்கவும்.. வாழ்க்கை அழகானது… பத்திரமாக இருங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe