துவரை, உளுந்தம் பருப்புகளின் விலை கடும் உயர்வு :

images 67 1 - 2026

விருதுநகர் சந்தையில் இன்று உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட உணவுக்குத் தேவையான பருப்பு வகைகளை வாங்குவதற்கு பெரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


விருதுநகர் மார்க்கெட்டில் வாரம்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு புதுஸ்நாடு வகை, இந்த வாரம் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.10500க்கு விற்பனையாகிறது.
துவரை ரூ.1200 உயர்வு : மேலும், துவரம்பருப்பு புதுஸ்லையன் வகை கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரே வாரத்தில் விலையானது கிடு, கிடுவென ரூ.1200 உயர்ந்து தற்போது ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உளுந்து ரூ.2200 உயர்வு : இதேபோல் உளுந்தம் பருப்பின் விலையும் கடந்த வாரத்தை விட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில், உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ) 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் ரூ.2200 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் உ
பாசிப் பருப்பு : பாசிப் பருப்பின் விலை கந்த வாரம் 100 கிலோ ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.100 உயர்ந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பாசிப் பயறு விலையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.7200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.300 உயர்ந்து தற்போது 7500க்கு விற்கப்படுகிறது.
அதேவேளை பாமாயில் விலையானது தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட 15 கிலோவிற்கு ரூ.20 குறைந்து தற்போது ரூ.2020க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories