கேரளாவில் பணம் கேட்டு தொல்லை- லாட்டரி ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு..

images 56 2 - 2026

பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் என்பதால் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பலகோடி வருவாய் கிடைத்து வருகிறது. அதில் ஓணம், சித்திரை விசு, கிறிஸ்துமஸ், ஆங்கிலபுத்தாண்டு உள்பட பண்டிகை நாட்களில் சிறப்பு பம்பர் குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்தது. அவரை பற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியானது.

images 61 1 - 2026
கடந்த ஆண்டு கேரளா லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப்

இதனைத்தொடர்ந்து உறவினர்கள் ஏராளமானோர் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதனால் அவர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் கதறி அழுதபடி வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி நடந்த பூஜா பம்பர் குலுக்கலில் திருச்சூரில் விற்பனையான சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்தது. ஆனால் முதல் பரிசு ரூ.10 கோடி கிடைத்த நபர், யாரிடமும் தெரிவிக்காமல் நேரடியாக லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு சென்று ரூ.10 கோடி பரிசு கிடைத்த விவரத்தை தெரிவித்தார். மேலும் அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கூறியதாக லாட்டரி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

இதேபோல கடந்த 19-ந் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் குலுக்கலில் முதல் பரிசு ரூ.16 கோடி பாலக்காட்டில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் 2 அதிர்ஷ்டசாலிகளும் தங்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்றும், அப்படி வெளியிட்டால் உறவினர்களும், நண்பர்களும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பரிசு பெற்ற நபர் கேட்டுக்கொண்டதால் பெயர் விவரங்களை வெளியிட லாட்டரி இயக்குனரகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories