விருதுநகரில் பிரதான குழாயில் உடைப்பு : தினசரி வீணாகும் 2 லட்சம் லிட்டர் குடிநீர்..

IMG 20230128 WA0190 - 2026


மாவட்ட தலைநகரான விருதுநகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் இங்கு பிரதான குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏறப்ட்டுள்ளதால் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருவது ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம். இங்கிருந்து விருதுநகர் நகராட்சி பகுதியில் வசிக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியிலிருந்து நாள்தோறும் சராசரியாக 30லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பிரதான குழாய்கள் வழியாக விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலை முதல் புதிய சிவகாசி சாலை இணைப்பு வரை 5 இடங்களில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 2லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது.
இந்த உடைப்புகளை சீர் செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன காரணத்தினாலோ, இதுவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால், குடிநீர் தினசரி வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலையில் உள்ள குழாய் உடைப்புகளை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இதுபோன்ற பிரச்சினை தலைவிரித்தாடும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து சீரானா குடிநீர் மக்களுக்கு வழங்க பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories