நயன்தாரா நட்ட கிறிஸ்துமஸ் மரம்… விழாவுக்கு தயாராகி விட்டாராம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

nayantara christmastree - 2026

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை ‘நட்டு’ விழாவுக்கு தயாராகி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். படப்பிடிப்பும் படபடப்பும் இல்லாத நாட்களில் இருவரும் ஹாய்யாக ஜோடி போட்டு ஊர் சுற்றி வருகிறார்கள். அந்தப் புகைப்படங்களையும் இணையதளங்களில் வெளியிட்டு உசுப்பேத்தி வருகின்றனர்.

இப்போது பண்டிகை சீஸன். கிறிஸ்துவரான நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு தயாராகி விட்டார். அவரும், அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரம் தயார் செய்துள்ளனர்.

இந்தப் படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நயன்தாரா “கிறிஸ்துமஸ் மரம் ரெடி ஆகிவிட்டது. இனி கொண்டாட்டம்தாம்” என பதிவிட்டுள்ளார். மேலும், வழக்கம்போல், அவர்கள் தயார் செய்த மரத்தின் அருகே காதலருடன் நின்று செல்பி எடுத்து அதையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இதைக்கண்டு ரசிகர்கள் சிலர் “வாவ்.. சூப்பர் ஜோடி..! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” என பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இருவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைச் சொல்லி, மரங்களை வெட்டாமல், இயற்கையை சிதைக்காமல், மெழுகுவர்த்தி ஏற்றி காற்றில் நஞ்சைக் கலக்காமல், அதிக அளவு மின்விளக்குகளை எரியவிட்டு, பூமியை சூடாக்காமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img