வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இலவசம் என்று அறிவிக்கும், போது, அது மக்களுக்கு போய்ச் சேரணும் இல்ல.. இப்போது வாஜ்பாய் ஒரு பட்ஜெட் அறிவிச்சிருக்காரு.. அருமையான பட்ஜெட். அப்டின்னு முதலமைச்சர் சொல்லியிருக்காரு. 5 ஏக்கர் நிலமுள்ள விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையா வங்கில போடப் படும். 3 தவணையா போடப்படும்னு அறிவிச்சிருக்காங்க.
என்று பேசிக்கொண்டே போனார். தற்போதைய மத்திய அரசு மோடி தலைமையிலானது என்றோ, பாஜக., என்றோ இன்னமும் நினைவில் வைத்துக் கொள்ளாமல், மறைந்து போன வாஜ்பாயை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார் சீனிவாசன் என்று கலாய்க்கிறார்கள் பலரும்!