காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு!

senthilbalaji - 2026

கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நேற்று வேட்பு மனு தாக்கலின்போது காவல் உதவி ஆய்வாளர் சின்னத்துரையை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது, உதவி ஆய்வாளரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மீது தான்தோன்றி மலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவரை சற்று நேரம் நிறுத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச்செயலாளருமான செந்தில்பாலாஜியை குளித்தலை டி.எஸ்.பி.சுகுமார் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியதால் அவருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. தம்பிதுரைக்கு 11.00 – 12.00 மணி வரையும், ஜோதிமணிக்கு 12.00- 1.00 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் 12.30 வரை ஆட்சியர் அறையை விட்டு தம்பிதுரை வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் டென்ஷனான திமுக மாவட்டச்செயலாளர் செந்தில்பாலாஜி தம்பிதுரையை வெளியேற்றுமாறும், தங்களுக்கு நேரம் ஆவதாகவும் கூறினார். அவர்களுடன் டிஎஸ்பி சுகுமார் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய சமாதானத்தை ஏற்காத செந்தில் பாலாஜி முன்னேறிச் செல்ல முற்பட்டார். அப்போது டிஎஸ்பி சுகுமார், செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்து தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டிஎஸ்பிக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பாளர் ஜோதிமணியும் அவருடன் கடுமையாக வாதிட்டார். அந்த இடமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்த பின்பு புரோட்டகால் படி ஜோதிமணியிடம் தான் வேட்புமனு வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால், ஜோதிமணியை காக்க வைத்து தம்பிதுரைக்கு சப்ஸ்டியூட் ஆக உள்ள வேட்பாளரிடம் (டம்மி வேட்பாளர்) வேட்புமனு பெறப்பட்டதாம். நல்ல நேரம் முடியட்டும் என வேண்டும் என்றே தாமதம் செய்ததாக பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்த  திமுகவினர் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories