பாதிரியார்கள் செய்யும் அரசியல்… தேசத் துரோகமே! குமுறும் கிறிஸ்துவர்!

stalin christian sabha - 2026

பாதிரியர்களும், போதகர்களும், ஊழிய கார்களும் எதற்காக காங்கிரசுக்கு வாக்கு கேட்கிறீர்கள்

உங்கள் புனிதமான பணியை துறந்து விட்டு கேளுங்கள் . நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தலைமுறையை நாசம் செய்யாதீர்கள்.

எத்தனை காலம் தான் இப்படி சொல்லி சொல்லி ஏமாற்றுவீர்கள். மக்களை காக்க வாக்களிக்க சொல்லி கொடுங்கள்.

கிறிஸ்தவத்தை கிறிஸ்து காப்பார். உலகின் பெரிய மதமான கிறிஸ்தவ மதத்தை காங்கிரஸ் தான் பாதுகாக்கிறது என யார் உங்களிடம் சொன்னது.

பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்று கற்பித்து கொடுங்கள். காங்கிரசுக்கும் பாஜக க்கு‌ம் என்ன வித்தியாசம் கண்டீர்கள். நீங்கள் வாக்கு செலுத்த சொல்லும் காங்கிரஸ் கட்சி பணம் கொடுக்கிறது கொள்ளை அடிக்கிறார்கள். இது எப்படி கிறிஸ்துவின் பார்வையில் நியாயம் தானோ?.

பாஜக காரன் இந்து என்பதால் எங்களுக்கு ஓட்டு போடு என்கிறான். நீங்கள் கிறிஸ்தவர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்கிறீர்கள். இரண்டுமே மத வாதம் தானே.

அவர்கள் செய்வது மத அரசியல் என்றால் நீங்கள் செய்வது என்ன???.

எத்தனை ஆலயங்களில் மூப்பன் மார் தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் எத்தனை பேராய நிறுவனங்கள் அழிந்து போய் கொண்டிருக்கிறது? இதை எல்லாம் தடுத்து முதலில் கிறிஸ்தவத்தை வளருங்கள். பிறகு அரசியலில் குதியுங்கள்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

ஒரு நாள் இளைஞர்கள் எதற்காக ஆலயங்களில் ஒரு கட்சி சார்ந்த அரசியல் பேசுகிறீர்கள் என கேட்க தான் போகிறார்கள். சொல்லும் போது காங்கிரஸ் ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றது,

டெல்லியில் இந்திரா மரணத்திற்கு பிறகு 3000 பேரை கொன்றது,

கூடங்குளத்தில் போராடிய மீனவர்கள் ஆறு பேரை கொன்றது,

அனிதாவை கொன்ற நீட் தேர்வை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது,

மீத்தேன் கெயில் திட்டங்களை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது,

ஜல்லிக்கட்டு தடை காங்கிரஸ் தான் போட்டது,

காவிரி மற்றும் முல்லைப் பெரியாறில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டேன் என்று காங்கிரஸ் முதலமைச்சர்கள் சித்த ராமையா மற்றும் உம்மன்சாண்டி கூறினார்கள்,

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ் தான் சொன்னது … என சேர்த்து கூறி வாக்கு கேளுங்கள்.

எங்கள் சொந்த பணத்தையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் எதிர்காலத்தில் ஒரு தூய அரசியல் படைக்க செலவு செய்கிறோம்.

நீங்கள் எளிமையாக எங்களை உதிரி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

எங்களிலும் சிஎஸ்ஐ ஆர்சி பெந்தேகோஸ்த் பிரிவுகளில் ஊறி போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எங்களுக்கும் கிறிஸ்தவமும் தெரியும் அரசியலும் தெரியும்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க சொல்லும் நீங்கள் அவர்கள் கொண்டு வருவதாக சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிற வர்த்தக துறைமுகம், ரப்பர் பூங்கா, விளையாட்டு பூங்கா, தென்னை நார் தொழிற்சாலை, ஹெலிகாப்டர் தளம் இது எல்லாம் எங்கே என்று கேட்டீர்களா.

புனிதமான பீடத்தில் நின்று நீங்கள் ஓட்டு கேட்கும் அளவுக்கு காங்கிரஸ் ஒன்றும் தூய்மையான கட்சியும் இல்லை அதில் இருப்பவர்கள் எல்லாரும் நேர்மையான அரசியல் செய்பவர்களும் இல்லை. உங்கள் புனிதத்தை இழக்காதீர்கள்.

வசந்த குமாரின் பணம் இங்கு விளையாடும் தடுப்பீர்களா?. இந்தியா என்பது பல இனங்களின் தேசம் … இங்கு மாநில கட்சிகள் சேர்ந்து கூட்டாட்சி அமைத்தால் தான் அனைத்து இன, மத மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும் … அதை நோக்கி நகர தான் நாம் பார்க்க வேண்டும்

இதை தான் நாங்கள் முன் எடுக்கிறோம்.

குமரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் சமயத்தில் மூன்றாம் தர அரசியல் செய்கிறார்கள்

2006 ல் சீமான் பேசிய வீடியோவை பரப்பி ஓட்டு கேட்கிறார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

சிலுவையில் கிறிஸ்து மொழிந்த முதல் மொழி மன்னிப்பு. சீமான் எத்தனை முறை அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.?

கிறிஸ்து மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்க மாட்டார்கள் இவர்கள் கிறிஸ்துவை விட உயர்ந்தவர்கள். கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக என்று பத்து கட்டளையில் உள்ளது

அப்படி என்றால் வழங்குபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று தான் அர்த்தம் ஆனால் இவர்கள் அற்ப ஓட்டுக்காக வீணிலே வழங்குகிறார்கள்

நீங்களும் இவர்களுக்கு ஆதரவாக பீடத்தில் நின்று பேசுகிறீர்கள்.

உங்கள் ஆன்மீக பணியோடு நல்ல பழக்க வழக்கங்களை படித்து கொடுங்கள்… அரசியல் அறிவை புகட்டுங்கள்

ஒரு கட்சிக்கு மதத்தை காரணம் காட்டி வாக்கு கேட்டு மத வெறியை தூண்டாதீர்கள்.

இப்படிக்கு…

கிறிஸ்டோபர் தேவ ஆசிர்வாதம்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories