ராகுலின் ராஜினாமா நாடகம்..! ஐடியா கொடுத்தவர் நித்தியானந்தா…!

me rahul - 2026

மக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியை அடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவார் என்று அனுமானங்கள் உலவின.

அப்போதே, இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை! காங்கிரஸ் என்றால் அது ராகுல்தான், ராகுலை மீறி காங்கிரஸ் தலைமைப் பதவியெல்லாம் மற்றவருக்கு சென்றுவிடாது என்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர் பலர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பதவி குறித்து கிண்டல் அடித்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடப்போகிறது. அதில் ராகுல் தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்தக் கடிதம் அவராலேயே நிராகரிக்கப்படும்.

‘தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல’ என்று ராகுலே கூறுவார். இதன்பின் ராகுல் தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை ராகுல் ஏற்றுக் கொள்வார்.. என்று கிண்டல் செய்யப் பட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் காரியக் கமிட்டியில் ராகுல் ராஜினாமா நாடகம் குறித்தபடி நடந்தது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

முன்னர், சோனியா காந்தி பிரதமர் ஆக முயற்சி செய்த போது, அவர் வெளிநாட்டுக்காரர் என்பதால் கூடாது என்று எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்றன. அப்போது தனக்கு பதிலாக மன்மோகன் சிங்கை அமரவைத்து, காங்கிரஸ் தலைமைப் பதவியை தானே வைத்துக் கொண்டார்.

அதற்கு முன்னர் நரசிம்ம ராவுக்குப் பின்னர் 1996ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அப்போது, சீதாராம் கேசரி தலைவராக இருந்தார். அந்த நேரம் கட்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வெளியேறி வந்தனர். மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், மம்தா பானர்ஜி, ஜி.கே.மூப்பனார், பி.சிதம்பரம், அர்ஜுன் சிங், என்.டி.திவாரி என பலரும் வெளியேறினர். அப்போது ஜெயந்தி நடராஜன் வெளிப்படையாக சீதாராம் கேசரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இந்நிலையில் சோனியா தலைவரானார். ஆனால், பின்னர் 1999ல் அவரே பிரதமர் ஆக முயற்சி செய்த போது, அவரது வெளிநாட்டு பிறப்பைக் காரணம் காட்டி, காங்கிரஸ் தலைவர்களான சரத் பவார்,பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் தடுத்த போது, சோனியா தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது இம்மூவரும் காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அதன் பின்னர் அடுத்த இரு மாதங்களுக்குள் மீண்டும் காங்கிரஸ் தலைவராகி, தொடர்ந்து 133வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆனார்.

அதே போன்ற நாடகம் இப்போதும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தின் போது நடந்தது. இம்முறை நாடகத்தின் நாயகன் ராகுல் காந்தி.

இந்த நாடகத்துக்கான ஸ்கிரிப்டைக் கொடுத்தவர்தான் நித்தியானந்தா. அவரது ‘மீ’ என்ற பேச்சு மிகப் பிரபலம். அதுதான் ராகுலுக்கு இப்போது கைகொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories